பங்கர் ராய் - ஒரு வெறுங்கால் இயக்கத்தின் மூலம் கற்றுகொள்ளக்கூடிய பாடங்கள்
-
0:00 - 0:04உங்களை நான் வேறொரு உலகத்துக்கு அழைத்து சென்று,
-
0:04 - 0:06தினம் ஒரு டாலர் கூட செலவு செய்யாமல் வாழ்பவர்களான
-
0:06 - 0:1045 கால பழமையான ஒரு ஏழையின்
-
0:10 - 0:13காதல் கதையை
-
0:13 - 0:16பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,
-
0:18 - 0:22நான் இந்தியாவில் ஒரு மேற்தட்ட, பகடியான,
-
0:22 - 0:26மிகவும் விலையுயர்ந்த கல்வியை பெற்றேன்,
-
0:26 - 0:29அதனால் ஏறக்குறைய நான் அழிந்துவிட்டேன்.
-
0:31 - 0:33வருங்காலத்தில் என்னை
-
0:33 - 0:36ஒரு துதராகவோ, ஒரு ஆசிரியராகவோ, ஒரு மருத்துவராகவோ
-
0:36 - 0:40ஆக்க திட்டங்கள் இருந்தன.
-
0:40 - 0:43பார்ப்பதற்கு, அப்படி தோன்றவில்லை என்றாலும், நான் இந்திவாவின் தேசிய ஸ்குவாஷ் வீரராக
-
0:43 - 0:45மூன்று வருடங்களுக்கு இருந்தேன்.
-
0:45 - 0:47(சிரிப்பொலி)
-
0:47 - 0:50பரந்த உலகம் என் முன்னால் இருந்தது.
-
0:50 - 0:52அனைத்தும் என் காலடியில்.
-
0:52 - 0:55நான் தவறு ஏதும் செய்ய வாய்ப்பில்லை.
-
0:55 - 0:57பிறகு, ஓர் ஆர்வத்தில், நான் ஒரு கிராமத்திற்கு
-
0:57 - 0:59சென்று, வாழ்ந்து, வேலை செய்து
-
0:59 - 1:01பார்க்க வேண்டும் என்று யோசித்தேன்.
-
1:01 - 1:03இதனால், 1965-ல்,
-
1:03 - 1:07நான் கடுமையான வறட்சி நிலவிக்கொண்டிருந்த பீகார் மாநிலத்துக்கு சென்றேன்.
-
1:07 - 1:10நான் அங்கு பார்த்தது - பசியும், பட்டினியும், சாவும்.
-
1:10 - 1:13முதன் முறையாக பட்டினியால் மக்கள் இறப்பதை பார்த்தேன்.
-
1:13 - 1:16அது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.
-
1:16 - 1:18நான் வீடு திரும்பினேன்.
-
1:18 - 1:20என் அம்மாவிடம் சொன்னேன்.
-
1:20 - 1:23"நான் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வேலை செய்ய விரும்புகிறேன்" என்று.
-
1:23 - 1:25அம்மாவுக்கோ, மிகுந்த அதிர்ச்சி! கோமாவிற்கே போய்விட்டது போலிருந்தாள்.
-
1:25 - 1:28(சிரிப்பொலி)
-
1:28 - 1:30"என்னது இது?
-
1:30 - 1:33உலகம் முழுவதும் உனக்காகவே உள்ளது. சிறந்த வேலைவாய்ப்புகள் உனக்காக காத்திருக்கின்றன.
-
1:33 - 1:35ஆனால், நீ கிராமத்திற்கு சென்று வேலை செய்ய போகிறாயா?
-
1:35 - 1:37உனக்கு ஏதாவது ஆகிவிட்டதா?"
-
1:37 - 1:39நான் சொன்னேன், "இல்லை, எனக்கு சிறந்த கல்வி கிடைத்திருக்கிறது.
-
1:39 - 1:41அதனால், நான் யோசித்தேன்.
-
1:41 - 1:44என்னால் முடிந்த வரை,
-
1:44 - 1:46நான் ஏதேனும் திருப்பி தர வேண்டும்."
-
1:46 - 1:48"நீ கிராமத்திற்கு சென்று என்னை செய்ய விரும்புகிறாய்?
-
1:48 - 1:50வேலை இல்லை. பணமும் இல்லை.
-
1:50 - 1:52பாதுகாப்பும் இல்லை, வாய்ப்புகளும் இல்லை."
-
1:52 - 1:54நான் சொன்னேன், "நான் அங்கு வாழ விரும்புகிறேன்.
-
1:54 - 1:57அடுத்த ஐந்து வருடங்களுக்கு கிணறு வெட்ட போகிறேன்."
-
1:57 - 1:59"கிணறு வெட்ட போகிறாயா, ஐந்து வருடங்களுக்கு?
-
1:59 - 2:02நீ இந்திவாவின் மிகவும் விலையுயர்ந்த பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றுள்ளாய்.
-
2:02 - 2:04ஆனால், ஐந்து வருடங்களுக்கு கிணறு வெட்ட விரும்புகிறாயே?"
-
2:04 - 2:08அவள் என்னிடம் நீண்ட காலத்திற்கு பேசவே இல்லை,
-
2:08 - 2:11ஏனென்றால், அவள் நான் என் குடும்பத்தை ஏமாற்றிவிட்டேன் என்று நினைத்தாள்.
-
2:13 - 2:15ஆனால்,
-
2:15 - 2:18நானோ, மிகவும் அசாதாரமான ஞானமும் திறமையும்,
-
2:18 - 2:20மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த மக்கள் கொண்டுள்ளதை கண்டேன்.
-
2:20 - 2:23அவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே இல்லை --
-
2:23 - 2:25அவற்றை மதித்து, அடையாளம் கண்டு,
-
2:25 - 2:27ஒரு பெரிய அளவில் உபயோகம் செய்ததும் இல்லை.
-
2:27 - 2:29அப்போது, நான் சிந்தித்தேன் - வெறுங்கால் கல்லூரி ஒன்றை துவக்க வேண்டும் என்று --
-
2:29 - 2:31ஏழைகளுக்கான ஒரு கல்லூரி.
-
2:31 - 2:33ஏழைகள் எது முக்கியம் என்று நினைக்கிறார்களோ
-
2:33 - 2:36அதை பிரதிபலிக்கும் ஒரு கல்லூரி.
-
2:37 - 2:39நான் முதன் முறையாக ஒரு கிராமத்திற்கு சென்றேன்.
-
2:39 - 2:41அங்கே, பெரியவர்கள் என்னிடம் வந்து
-
2:41 - 2:43கேட்டார்கள், "நீ காவல் துறையிடமிருந்து தப்பித்து ஓடிவந்தவனா?" என்று.
-
2:43 - 2:45"இல்லை", என்றேன்.
-
2:45 - 2:48(சிரிப்பொலி)
-
2:49 - 2:51"நீ உன் பரீட்சையில் தோல்வி கண்டவனா?"
-
2:51 - 2:53"இல்லை", என்றேன்.
-
2:53 - 2:56"உனக்கு அரசு வேலை கிடைக்கவில்லையா?" "இல்லை" என்றேன்.
-
2:56 - 2:58"நீ இங்கு என்னை செய்கிறாய்?
-
2:58 - 3:00எதற்காக இங்கு வந்துள்ளாய்?
-
3:00 - 3:02இந்தியாவின் கல்வி முறை
-
3:02 - 3:05உன்னை பாரீஸ், டெல்லி, ஜுறிச் போன்ற இடங்களுக்கு வழிகாட்டும்;
-
3:05 - 3:07ஆனால், நீ இந்த கிராமத்தில் என்னை செய்யபோகிறாய்?
-
3:07 - 3:10உன்னிடம் எதாவது குறை இருந்து, எங்களிடம் மறைக்கிறாயா?"
-
3:10 - 3:13நான் சொன்னேன், "இல்லை, நான் உண்மையாக ஒரு கல்லூரி தொடங்க விரும்புகிறேன்,
-
3:13 - 3:15ஏழைகளுக்காக மட்டும்.
-
3:15 - 3:18ஏழைகள் எது முக்கியம் என்று நினைக்கிறார்களோ அதை இந்த கல்லூரி பிரதிபலிக்கும்."
-
3:18 - 3:22அந்த பெரியவர்களோ, எனக்கு ஒரு சிறப்பான, ஆழமான புத்திமதி கூறினர்.
-
3:22 - 3:24அவர்கள் சொன்னார்கள், "தயவு செய்து,
-
3:24 - 3:27ஒரு பட்டம் பெற்றவனையோ, கல்வி தகுதி பெற்றவனையோ, கொண்டு வராதே,
-
3:27 - 3:29உன் கல்லூரிக்குள்."
-
3:29 - 3:32ஆதலின், இது தான் இந்தியாவின் ஒரே கல்லூரி,
-
3:32 - 3:35எங்கு உங்களிடம் ஒரு பேரறிஞர் பட்டம் இருந்தாலோ, முனைவர் பட்டம் இருந்தாலோ,
-
3:35 - 3:37உங்களுக்கு கல்லூரிக்குள் வர அனுமதி கிடையாது.
-
3:37 - 3:42நீங்கள் கல்வியை கைவிட்டவனாகவோ, அல்லது எதுவும் தெரியாதவனாகவோ இருந்தால் தான்
-
3:42 - 3:45எங்கள் கல்லூரிக்கு வர இயலும்.
-
3:45 - 3:47நீங்கள் உங்கள் கைகளால் வேலை செய்ய வேண்டும்.
-
3:47 - 3:49நீங்கள் எல்லா பணிகளுக்கும் கௌரவம் தர வேண்டும்.
-
3:49 - 3:52சமூகத்திற்கு உபயோகம் அளிக்கும் ஒரு திறமை, உங்களுக்கு இருக்க வேண்டும்.
-
3:52 - 3:55அதனால், சமூகத்திற்கு பலனளிக்க வேண்டும்.
-
3:55 - 3:58இதற்காக, நாங்கள் ஒரு வெறுங்கால் கல்லூரியை தொடங்கினோம்.
-
3:58 - 4:00தொழில் செய்யும் மனப்மான்மையை மாற்றி எழுதினோம்.
-
4:00 - 4:02தொழில் செய்பவன் யார்?
-
4:02 - 4:04தொழில் செய்பவன் ஒரு தொழிலர்,
-
4:04 - 4:06ஆற்றல், திறன்
-
4:06 - 4:09நம்பிக்கை மற்றும் கோட்பாடுகள் கொண்டவனாக இருக்க வேண்டும்.
-
4:09 - 4:12உற்று உணர்பவன் ஒரு தொழிலர்.
-
4:12 - 4:14மகப்பேறு உதவியாளர் அல்லது ஒரு மருத்துவச்சி
-
4:14 - 4:16ஒரு தொழிலர்.
-
4:16 - 4:19புத்துக் கட்டு போடுபவன், ஒரு தொழிலர்.
-
4:19 - 4:21இந்த உலகம் முழுவதும் தொழிலர்கள் இருக்கிறார்கள்.
-
4:21 - 4:25எட்ட முடியாத கிராமங்களில், அவர்களை பார்க்கலாம் உலகம் முழுவதும்.
-
4:25 - 4:28நாங்கள் நினைத்தோம், இந்த மக்களை முக்கியமான போக்கில் கொண்டு வர வேண்டும்.
-
4:28 - 4:31இவர்களின் ஞானமும் திறமையும், வெளிக்காட்ட வேண்டும்,
-
4:31 - 4:33அவை பொதுவானவை, உலகம் எங்கும் பின்பற்ற தகுதியானவை என்று.
-
4:33 - 4:35அவற்றை உபயோகிக்க வேண்டும். பயன்பாட்டிற்கு கொண்ட வர வேண்டும்.
-
4:35 - 4:37வெளி உலகிற்கு நாம் காட்ட வேண்டும் அவற்றை --
-
4:37 - 4:39இந்த ஞானமும் திறமையும்
-
4:39 - 4:43இன்றளவுக்கும் பயனுள்ளவை என்று.
-
4:43 - 4:45இந்த கல்லூரி நடைபெறுகிறது
-
4:45 - 4:49மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையையும், வேலை முறையையும் பின்பற்றி.
-
4:49 - 4:53நீங்கள் தரையில் சாப்பிடுவீர்கள், தரையில் உறங்குவீர்கள், தரையில் வேலை செய்வீர்கள்.
-
4:53 - 4:55இங்கு ஒப்பந்தமும் இல்லை, எழுதிய ஒப்பந்த பத்திரிக்கையும் இல்லை.
-
4:55 - 4:58நீங்கள் என்னுடன் 20 வருடங்கள் இருக்கலாம், இல்லை நாளையே சென்றுவிடலாம்.
-
4:58 - 5:01மற்றும் இங்கு யாருக்கும் 100 டாலர் மேல் சம்பளம் கிடைக்கக் கூடாது.
-
5:01 - 5:04நீங்கள் பணத்திற்காக வந்தால், வெறுங்கால் கல்லூரிக்கு வரக்கூடாது.
-
5:04 - 5:06நீங்கள் வேலைக்காக இங்கு வாருங்கள். சவால்களை எதிர்கொள்ள
-
5:06 - 5:08வெறுங்கால் கல்லூரிக்கு வாருங்கள்.
-
5:08 - 5:11இங்கு நீங்கள் கிறுக்குத்தனமான கருத்துக்களை செயல் முறைபடுத்தலாம்.
-
5:11 - 5:13உங்களிடம் எதாவது ஒரு எண்ணம் இருந்தால், அதை இங்கு வந்து செய்து பார்க்கலாம்.
-
5:13 - 5:15நீங்கள் தோல்வி அடைந்தால், தவறில்லை.
-
5:15 - 5:18கீழே விழுந்து, அடி வாங்கி நீங்கள் மீண்டும் முணைவீர்கள்.
-
5:18 - 5:21இந்த கல்லூரியில் மட்டும் தான், கற்பிப்பவன் கல்வி கற்பவன் ஆகிறான்.
-
5:21 - 5:24கல்வி கற்பவன் கற்பிப்பவன் ஆகிறான்.
-
5:24 - 5:27இந்த கல்லூரியில் மட்டும் தான், சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.
-
5:27 - 5:30நீங்கள் சேவை செய்யும் சமூகம் உங்களை சான்றுபடுத்தும்.
-
5:30 - 5:32நீங்கள் ஒரு பொறியாளர் என்று காட்ட,
-
5:32 - 5:35சுவரில் தொங்க விட ஒரு காகிதம் தேவை இல்லை.
-
5:37 - 5:39நான் இதை சொன்ன போது,
-
5:39 - 5:42அவர்கள் சொன்னார்கள், "சரி, இதனால் என்னை சாத்தியம் என்று காண்பியுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
-
5:42 - 5:46இது எல்லாம் உங்களால் இதை நடைமுறையில் காட்ட இயலவில்லை என்றால் வாய் பேச்சுதான்."
-
5:46 - 5:49இதனால், 1986-ல்,
-
5:49 - 5:52நாங்கள் முதல் வெறுங்கால் கல்லூரியை கட்டினோம்,
-
5:52 - 5:54இது 12 வெறுங்கால் கட்டிடக்கலைஞர்களால் கட்டப்பட்டது.
-
5:54 - 5:56இவர்களால் எழுத படிக்க முடியாது.
-
5:56 - 5:59ஒரு சதுரடிக்கு ஒன்றரை டாலர் செலவில் கட்டப்பட்டது .
-
5:59 - 6:03150 மக்கள் அங்கே வாழ்ந்தனர், வேலை செய்தனர்.
-
6:03 - 6:062002-ல், அவர்கள் கட்டிடக்கலைக்கு ஆகா கான் விருதை பெற்றார்கள்,
-
6:06 - 6:09ஆனால், ஒரு சந்தேகம் எழுந்தது. இதற்கு ஒரு கட்டிடக்கலைஞர் உதவி செய்துள்ளார் என்று.
-
6:09 - 6:11நான் சொன்னேன், "ஆமாம், அவர்கள் செயல்திட்டத்தை வரைந்தார்கள்,
-
6:11 - 6:15ஆனால் வெறுங்கால் கட்டிடக்கலைஞர்கள் தான் இதனை கட்டினர்."
-
6:16 - 6:19நாங்கள் மட்டும் தான் அவர்கள் அளித்த $50,000 திருப்பி தந்து விட்டோம்,
-
6:19 - 6:21ஏனென்றால், அவர்கள் எங்களை நம்பவில்லை.
-
6:21 - 6:25அவர்கள் அவதூறு கூறுவது போல தோன்றியது,
-
6:25 - 6:28டிலோனியாவின் வெறுங்கால் கட்டிடக்கலைஞர்கள் மீது.
-
6:28 - 6:30காடுகளைக் கவனிக்கும் அதிகாரியிடம், நான் கேட்டேன் --
-
6:30 - 6:33அவர் ஒரு உயர் அதிகாரத்தில் இருந்த, மிகுந்த தகுதியான நிபுணர் --
-
6:33 - 6:36நான் கேட்டேன். "இந்த இடத்தில என்னை கட்ட முடியும்?" என்று.
-
6:36 - 6:38அவர் நிலத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, "மறந்து விடு. எதுவும் முடியாது.", என்றார்.
-
6:38 - 6:40"இது எதற்கும் மதிப்பு இல்லை.
-
6:40 - 6:42தண்ணீர் இல்லை. பாறைகள் நிறைந்த நிலம்."
-
6:42 - 6:44நானோ, கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன்.
-
6:44 - 6:46நான் சொன்னேன், "சரி, நான் ஊர் பெரியவரிடம் சென்று,
-
6:46 - 6:49கேட்கிறேன், 'இங்கு என்னை விளையும் என்று?'"
-
6:49 - 6:51அந்த பெரியவர் நிதானமாக என்னை பார்த்து சொன்னார் ,
-
6:51 - 6:53"நீ இதை கட்டு, நீ இதை கட்டு, இதை போடு, வேலை செய்யும்."
-
6:53 - 6:56இன்று, இது இப்படி தான் காட்சி அளிக்கிறது.
-
6:57 - 6:59நான் மொட்டை மாடிக்கு சென்றேன்,
-
6:59 - 7:01அங்கு பெண்கள் எல்லாம் சேர்ந்து சொன்னார்கள், "வெளியே செலவும்.
-
7:01 - 7:04ஆண்கள் வெளியே செலவும். நாங்கள் எங்களுடைய தொழில் நுட்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம்.
-
7:04 - 7:06நாங்கள் மாடியிலிருந்து நீர் இறந்காதவாறு செய்கிறோம்."
-
7:06 - 7:08(சிரிப்பு)
-
7:08 - 7:11அது கொஞ்சம் பனைவெல்லம், கொஞ்சம் சிறுநீர்,
-
7:11 - 7:13மற்றும் நான் அறியாத சிலவற்றின் கலவை.
-
7:13 - 7:15ஆனால், அது உண்மையாக ஒழுகுவதில்லை.
-
7:15 - 7:181986 இலிருந்து, அது ஒழுகவில்லை.
-
7:18 - 7:21இந்த தொழில் நுட்பத்தை, பெண்கள் ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.
-
7:21 - 7:24(சிரிப்பு)
-
7:24 - 7:26இந்த கல்லூரியில் மட்டும் தான்
-
7:26 - 7:30மின் உற்பத்தி முழுமையாக சூரிய ஒளியினால் நடைபெறுகிறது.
-
7:30 - 7:32அணைத்து சக்தியும் சூரியனிலிருந்து வருகிறது.
-
7:32 - 7:34மொட்டை மாடியில், 45 கிலோவாட் சக்தி கொண்ட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
7:34 - 7:36அடுத்த 25 வருடங்களுக்கு, அனைத்தும் சூரிய சக்தியினால் வேலை செய்யும்.
-
7:36 - 7:38சூரிய ஒளி இருக்கும் வரை,
-
7:38 - 7:40எங்களுக்கு மின் உற்பத்தி பிரச்சனைகள் கிடையாது.
-
7:40 - 7:42இதில் அழகு என்னவென்றால்,
-
7:42 - 7:45இதை அமைத்தது ஒரு
-
7:45 - 7:48பூசாரி, ஒரு இந்து பூசாரி.
-
7:48 - 7:51அவர் 8 வருடம் தான் தொடக்கப்பள்ளி சென்றார்.
-
7:51 - 7:54பள்ளிக்கூடம் சென்றது இல்லை, கல்லூரி சென்றது இல்லை.
-
7:54 - 7:56அவருக்கு சூரிய சக்தி பற்றி நிறைய அறிவார்,
-
7:56 - 8:00உலகத்தில் யாருக்கும் எங்கேயும் தெரியாதாளவிற்கு, அவருக்கு தெரியும் என்று என்னால் உறுதியுடன் கூற முடியும்.
-
8:02 - 8:04உணவு, நீங்கள் வெறுங்கால் கல்லூரிக்கு வருமானால்,
-
8:04 - 8:07சூரிய சக்தி மூலமாக சமைக்கப்படுகிறது.
-
8:07 - 8:10அந்த சூரிய சக்தி பயன்படுத்தும் அடுப்பை வடிவமைத்தது,
-
8:10 - 8:13பெண்கள் தான்,
-
8:13 - 8:15படிப்பறிவில்லாத பெண்கள்.
-
8:15 - 8:17அவர்கள் வடிவமைத்தது
-
8:17 - 8:19ஒரு மதிநுட்பமான சூரிய சக்தி பயன்படுத்தும் அடுப்பை.
-
8:19 - 8:22அது ஒரு சாய்மலை வட்டமான ஷ்செயபர் சூரிய சக்தி பயன்படுத்தும் அடுப்பு.
-
8:25 - 8:29அவர்கள் பாதி ஜெர்மனியர் ஆகி விட்டார்கள் ,
-
8:29 - 8:31ஏனென்றால் அவர்கள் மிகவும் துள்ளியமாக அதை வடிவமைத்துள்ளனர்.
-
8:31 - 8:33(சிரிப்பு)
-
8:33 - 8:36நீங்கள் இந்திய பெண்கள் இவ்வளவு துள்ளியமாக இருப்பதாக பார்த்திருக்க மாட்டீர்கள்.
-
8:37 - 8:39அந்த கிடைசி அங்குலம் வரை அவர்களால்
-
8:39 - 8:41அந்த அடுப்பை தயாரிக்க முடியும்.
-
8:41 - 8:43நாங்கள் 60 சாப்பாடுகள் தயாரிக்கிறோம் தினமும்.
-
8:43 - 8:45சூரிய சக்தி சமையலின் மூலம்.
-
8:45 - 8:47எங்களுக்கு என்று ஒரு பல் மருத்துவர் ஒருவர் உள்ளார்.
-
8:47 - 8:50அவர் ஒரு மூதாட்டி, படிக்காதவர்.
-
8:50 - 8:52அவர் தான் பற்களின் ஆரோகியத்தை கவனித்துக்கொள்கிறார்,
-
8:52 - 8:557000 குழந்தைகளுக்கு.
-
8:56 - 8:58வெறுங்கால் தொழில் நுட்பத்தை:
-
8:58 - 9:01இது 1986யில் -- பொறியாளர் இல்லாமல், கட்டிடக்கலைஞர் இல்லாமல்
-
9:01 - 9:04நாங்கள் மழைத் தண்ணீர் மொட்டை மாடியிலிருந்து சேமித்து வந்தோம்.
-
9:04 - 9:06மிகவும் கொஞ்சம் தண்ணீர் தான் வீணாக போனது.
-
9:06 - 9:08அணைத்து மொட்டை மாடிகளும் இணைக்கப்பட்டிருந்தன, நிலத்தடியில்,
-
9:08 - 9:10ஒரு 400,000 லிட்டர் குளத்திற்கு.
-
9:10 - 9:12தண்ணீர் வீணாக்கப்படவில்லை.
-
9:12 - 9:15எங்களுக்கு நான்கு வருடம் வறட்சி இருந்தாலும், எங்கள் வளாகத்தில் நீர் இருக்கும்.
-
9:15 - 9:17ஏனென்றால் நாங்கள் மழை நீரை சேமிக்கிறோம்.
-
9:17 - 9:2060 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது இல்லை,
-
9:20 - 9:22ஏனெனில், அவர்களுக்கு கால்நடை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உள்ளது --
-
9:22 - 9:24ஆடுகள் , செம்மறியாடுகள் --
-
9:24 - 9:26மற்றும் வீட்டில் உள்ள வேலைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
9:26 - 9:29இதனால், நாங்கள் ஒரு பள்ளியை ஆரம்பிக்க எண்ணினோம்.
-
9:29 - 9:31இரவில் குழந்தைகளுக்கு என்று.
-
9:31 - 9:33டிலோனியாவின் இரவு பள்ளிகள்
-
9:33 - 9:3675000 குழந்தைகளை படிக்க வைத்திருக்கின்றன.
-
9:36 - 9:38ஏனென்றால், ஒரு குழந்தைக்கு ஏற்றவாறு பள்ளி அமைய வேண்டும்.
-
9:38 - 9:40ஆசிரியருக்கு ஏற்றவாறு அல்ல.
-
9:40 - 9:42இந்த பள்ளிகளில் நாங்கள் என்ன கற்று தருகிறோம்?
-
9:42 - 9:44ஜனநாயகம், குடியுரிமை,
-
9:44 - 9:47உங்களின் நிலத்தை எப்படி அளக்க வேண்டும்,
-
9:47 - 9:49நீங்கள் கைது செய்யபட்டீர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்,
-
9:49 - 9:53உங்களது கால்நடைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது என்றால் என்ன செய்ய வேண்டும்.
-
9:53 - 9:55இதை தான் நாங்கள் கற்று தருகிறோம், இந்த இரவு பள்ளிகளில்.
-
9:55 - 9:58சூரிய சக்தி அனைத்து பள்ளிகளுக்கும் வெளிச்சம் தருகின்றன.
-
9:58 - 10:00ஒவ்வொரு ஐந்து வருடமும்
-
10:00 - 10:02ஒரு தேர்தல் நடக்கும்.
-
10:02 - 10:066லிருந்து 14 வயது குழந்தைகள்
-
10:06 - 10:09ஜனநாயக முறையில் பங்கேற்று
-
10:09 - 10:13ஒரு பிரதமரை தேர்ந்தெடுப்பர்.
-
10:13 - 10:16எங்கள் பிரதமருக்கு 12 வயது.
-
10:17 - 10:19அவள் 20 ஆடுகளை காலையில் மேய்கிறாள்,
-
10:19 - 10:22மாலையில் பிரதமர் வேலை செய்கிறாள்.
-
10:22 - 10:24அவளிடம் ஒரு அமைச்சரவை உள்ளது.
-
10:24 - 10:27கல்வி அமைச்சர் ஒருவர், மின் வாரியத்துறை அமைச்சர் ஒருவர், சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் உள்ளனர்.
-
10:27 - 10:29குழந்தைகளை. அவர்கள் தான் கண்காணித்து மேற்பார்வையிட்டு வருகின்றனர்,
-
10:29 - 10:32150 பள்ளிகளில் படிக்கும் 7000.
-
10:34 - 10:36அவள் ஐந்து வருடங்களுக்கு முன்பு, உலக குழந்தைகள் விருதை பெற,
-
10:36 - 10:38ஸ்வீடன் சென்றாள்.
-
10:38 - 10:40தனது கிராமத்தை விட்டு முதல் முறையாக வெளியே செல்கிறாள்.
-
10:40 - 10:43ஸ்வீடனை பார்த்ததும் இல்லை.
-
10:43 - 10:45நிகழ்பவை கண்டு மிரட்சியடையவுமில்லை.
-
10:45 - 10:47ஸ்வீடனின் ராணி, அங்கு இருந்தார்.
-
10:47 - 10:50என்னிடம் திரும்பி கேட்டார், "இந்த குழந்தையிடம் கேளுங்கள் அவளுக்கு எங்கே இருந்து இத்தனை தன்னம்பிக்கை வருகிறது என்று?
-
10:50 - 10:52அவளுக்கு 12 வயதே ஆகிறது.
-
10:52 - 10:55அவள் எதை கண்டும் மிரட்சியடையவேயில்லையே."
-
10:55 - 10:58அந்த சிறுமி, ராணியின் இடது புறத்திலிருந்து,
-
10:58 - 11:01திரும்பி, ராணியை நோக்கி சொன்னாள்,
-
11:01 - 11:04"அவரிடம் சொல்லுங்கள் நான் தான் பிரதமர் என்று."
-
11:04 - 11:06(சிரிப்பொலி)
-
11:06 - 11:14(கைத்தட்டல்)
-
11:14 - 11:18கல்லாமை எங்கு அதிகம் உள்ளதோ,
-
11:18 - 11:21அங்கு நாங்கள் பொம்மலாட்டம் பயன்படுத்துவோம்.
-
11:21 - 11:24பொம்மலாட்டம் வாயிலாக நாங்கள் அவர்களிடம் பேசுவோம்.
-
11:30 - 11:33ஜோக்ஹீம் மாமா உள்ளார்.
-
11:33 - 11:37அவருக்கு வயது 300.
-
11:37 - 11:40அவர் தான் என்னுடைய மனோதத்துவ நிபுணர் . அவர் தான் என்னுடைய குரு.
-
11:40 - 11:42அவர் தான் என்னுடைய மருத்துவர். அவர் தான் என்னுடைய வழக்கறிஞர்.
-
11:42 - 11:44அவர் தான் என்னுடைய கொடையாளி.
-
11:44 - 11:46அவர் தான் நிதி திரட்டுகிறார்,
-
11:46 - 11:49அவர் தான் சண்டைகளை தீர்த்துவைக்கிறார்.
-
11:49 - 11:52அவர் தான் கிராமத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்.
-
11:52 - 11:54கிராமத்தில் ஏதேனும் பதற்றம் இருந்தாலோ,
-
11:54 - 11:56பள்ளிகளில் வருகை குறைந்தாலோ,
-
11:56 - 11:58ஆசிரியர் பெற்றோர் நடுவில் உராய்வு ஏற்பட்டாலோ,
-
11:58 - 12:01கூத்தாட்டுப் பொம்மை ஆசிரியரையும் பெற்றோரையும் கிராமத்திற்கு முன்னால் அழைத்து
-
12:01 - 12:03"கை குலுக்குங்கள்.
-
12:03 - 12:05வருகை குறைய கூடாது." என்று சொல்லும்.
-
12:07 - 12:09இந்த கூத்தாட்டுப் பொம்மைகள்
-
12:09 - 12:11உலக வங்கியின் மீள்சுழற்சி செய்யப்பட்ட அறிக்கைகளினால் ஆனவை.
-
12:11 - 12:13(சிரிப்பொலி)
-
12:13 - 12:20(கைத்தட்டல்)
-
12:20 - 12:24இந்த பகிர்தளும், எளிதான முறையை,
-
12:24 - 12:26சூரிய ஒளினால் கிராமங்களுக்கு சக்தி தரும் முறையை,
-
12:26 - 12:28நாங்கள் இந்தியா முழுவதுக்கும் கொண்டு சென்றிருக்கிறோம்,
-
12:28 - 12:31லதாக் முதல் பூட்டான் வர --
-
12:33 - 12:35சூரிய ஒளியினால் கிராமங்களுக்கு சக்தி தரும் முறையை
-
12:35 - 12:38மக்களுக்கு கற்று தந்திருக்கிறோம்.
-
12:39 - 12:41நாங்கள் லடாக் சென்றோம்,
-
12:41 - 12:43அங்கு உள்ள ஒரு பெண்மணியை கேட்டோம் --
-
12:43 - 12:46அப்போது, மைனஸ் 40 , நீங்கள் மாடியை விட்டு வெளியே வந்தாக வேண்டும்,
-
12:46 - 12:49ஏனென்றால், எல்லா இடத்திலேயும் பனி விழுந்திருந்தது.
-
12:49 - 12:51நாங்கள் அந்த பெண்மணியிடம்,
-
12:51 - 12:53"உங்களுக்கு சூரிய மின் சக்தியினால்
-
12:53 - 12:55என்னை லாபம்?" என்று கேட்டோம்.
-
12:55 - 12:57அவள் ஒரு நிமிடம் யோசித்து கூறினாள்,
-
12:57 - 13:01"நான் என்னுடைய புருஷனின் முகத்தை பார்க்க முடிந்தது, முதன் முறையாக, பனி காலத்தில்."
-
13:01 - 13:04(சிரிப்பொலி)
-
13:04 - 13:06நாங்கள் ஆப்கானிஸ்தான் சென்றோம்.
-
13:06 - 13:11இந்தியாவில் நாங்கள் கற்ற ஒரு பாடம்,
-
13:11 - 13:15ஆண்களை பயிற்றுவிக்க முடியாது.
-
13:15 - 13:19(சிரிப்பொலி)
-
13:19 - 13:21ஆண்கள் துருதுரு என்றுள்ளவர்கள்.
-
13:21 - 13:23ஆண்கள் பேராவலுடையவர்கள்,
-
13:23 - 13:26ஆண்கள் சுற்றிக்கொண்டே இருப்பவர்கள்,
-
13:26 - 13:28அவர்களுக்கு வேண்டியது எல்லாம் ஒரு சான்றிதழ்.
-
13:28 - 13:30(சிரிப்பொலி)
-
13:30 - 13:33உலகத்தில் எங்கு சென்றாலும், இந்த சுபாவம் பார்க்கலாம் --
-
13:33 - 13:35ஆண்கள் சான்றிதழ் விரும்புவது.
-
13:35 - 13:38ஏனென்றால், அவர்கள் நகரத்துக்கு சென்று வேலை தேட
-
13:38 - 13:41கிராமத்தை விட்டு செல்ல விரும்புகிறார்கள்.
-
13:41 - 13:44இதனால், நாங்கள் ஒரு சீரிய தீர்வு கண்டோம்.
-
13:44 - 13:46மூதாட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது என்பது.
-
13:48 - 13:50இன்றைய உலகில்
-
13:50 - 13:52அறிவிப்பதற்கு எது சிறந்த வழி?
-
13:52 - 13:54தொலைக்காட்சி? இல்லை.
-
13:54 - 13:56தந்தி அனுப்புவது? இல்லை.
-
13:56 - 13:58தொலைபேசி? இல்லை.
-
13:58 - 14:00ஒரு பெண்மணியிடம் சொல்வது.
-
14:00 - 14:03(சிரிப்பொலி)
-
14:03 - 14:07(கைத்தட்டல்)
-
14:07 - 14:09நாங்கள் ஆப்கானிஸ்தான் சென்றோம், முதல் முறையாக,
-
14:09 - 14:11அங்கு முன்று பெண்களை தேர்ந்தெடுத்தோம்.
-
14:11 - 14:13"நாங்கள் இவர்களை இந்தியா அழைத்து செல்கிறோம்" , என்றோம்.
-
14:13 - 14:15அவர்கள், "முடியவே முடியாது. இவர்கள் தங்களின் அறையை விட்டு கூட செல்வது இல்லை.
-
14:15 - 14:17அவர்களை நீங்கள் இந்தியா அழைத்து செல்ல போகிறீர்களா.", என்றனர்.
-
14:17 - 14:19நான் சொன்னேன், "சரி, நான் ஒரு தள்ளுபடி தருகிறேன். இவர்களின் கணவர்களையும் அழைத்துச் செல்கிறேன்."
-
14:19 - 14:21அவர்களின் கணவர்களையும் கூட்டிக்கொண்டு சென்றேன்.
-
14:21 - 14:24ஐயத்திற்கிடமின்றி, பெண்கள் தான் ஆண்களை விட புத்திசாலியாக இருந்தார்கள்.
-
14:24 - 14:26ஆறு மாதத்தில்,
-
14:26 - 14:29இந்த பெண்களுக்கு எப்படி பயிற்சியளிப்பது?
-
14:29 - 14:31சைகை மொழி.
-
14:31 - 14:34நீங்கள் எழுத்து வடிவத்தை தேர்ந்தெடுக்க முடியாது.
-
14:34 - 14:36நீங்கள் பேச்சை தேர்ந்தெடுக்க முடியாது.
-
14:36 - 14:39நீங்கள் சைகை மொழியை பயன்படுத்த தொடங்குவீர்கள்.
-
14:39 - 14:41ஆறு மாதத்தில்
-
14:41 - 14:45அவர்கள் சூரிய சக்தி பொறியாளர்கள் ஆகிவிட்டனர்.
-
14:45 - 14:48அவர்கள் திரும்பி சென்று, அவர்களது கிராமத்தில் சூரிய சக்தி உற்பத்தி செய்வார்கள்.
-
14:48 - 14:50அப்பெண்கள் திரும்பி சென்று,
-
14:50 - 14:53ஒரு கிராமத்தில் சூரிய சக்தி உற்பத்தி செய்ய தொடங்கினார்கள்,
-
14:53 - 14:55ஒரு பட்டறையை அமைத்தார்கள் --
-
14:55 - 14:58ஆப்கானிஸ்தானில், சூரிய சக்தி உற்பத்தி செய்யப்பட்ட முதல் கிராமம்,
-
14:58 - 15:01மூன்று பெண்களால் சாத்தியம் ஆனது.
-
15:01 - 15:03இந்த பெண்மணி
-
15:03 - 15:05ஒரு அசாதாரமான ஒரு பாட்டி.
-
15:05 - 15:1055 வயதான இவள், எனக்காக ஆப்கானிஸ்தானில் 200 வீடுகளில் சூரிய சக்தி உற்பத்தி செய்துருக்கிறாள்.
-
15:10 - 15:13அவை நிலைகுலையவில்லை.
-
15:13 - 15:16அவள் ஆப்கானிஸ்தானில் ஒரு பொறியியல் துறையில் அங்கே உள்ள
-
15:16 - 15:18துறை தலைவரிடம் சென்று ஏ.சி மற்றும் டி.சி
-
15:18 - 15:20மின்சாரத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கினாள்.
-
15:20 - 15:22அவருக்கு தெரியவில்லை.
-
15:22 - 15:25அந்த மூன்று பெண்மணிகள் 27 பெண்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளித்து,
-
15:25 - 15:28100 கிராமங்களில் சூரிய சக்தி உற்பத்தி செய்துள்ளார்கள்.
-
15:28 - 15:31நாங்கள் ஆப்ரிக்கா சென்றோம்,
-
15:31 - 15:33அங்கேயும் அதையே செய்தோம்.
-
15:33 - 15:36எட்டு ஒன்பது நாடுகளிலிருந்து வந்த பெண்கள் அனைவரும் ஒரே மேசையில்அமர்ந்து,
-
15:36 - 15:39பேசிக்கொண்டு இருந்தார்கள், ஒரு வார்த்தைக் கூட புரியாமல்,
-
15:39 - 15:41ஏனென்றால், அவர்கள் அனைவரும் பேசுவது ஒரு மாறுப்பட்ட மொழி.
-
15:41 - 15:43ஆனால் அவர்களின் உடல் மொழி, பிரமாதமாக இருந்தது.
-
15:43 - 15:45ஒருவருக்கொருவரிடம் பேசிக்கொண்டே
-
15:45 - 15:47அவர்கள் சூரிய சக்தி பொறியாளர்கள் ஆகிக்கொண்டிருந்தார்கள்.
-
15:47 - 15:50நான் சியாரா லீஒன் சென்றேன்.
-
15:50 - 15:53நடு இரவில், ஒரு மந்திரி காரை ஓட்டிக்கொண்டு சென்ற போது,
-
15:53 - 15:55ஒரு கிராமத்தை கடந்து சென்றார்.
-
15:55 - 15:58திரும்பி வந்து, அந்த கிராமத்துக்கு சென்று கேட்டார், "சரி, இங்கே என்ன நடக்கிறது?"
-
15:58 - 16:00அவர்கள் கூறினர், "இந்த இரண்டு மூதாட்டிகள்..."
-
16:00 - 16:03"மூதாட்டிகளா?" அவரால், நடந்திருப்பதை கண்டு நம்ப முடியவில்லை.
-
16:03 - 16:06"அவர்கள் எங்கே சென்றார்கள்?" என்று கேட்டார். "இந்தியா சென்று திரும்பி வந்தனர்."
-
16:06 - 16:08அவர் உடனே, ஜனாதிபதியை பார்க்க சென்றார்.
-
16:08 - 16:10அவர் சொன்னார், " உங்களுக்கு தெரியுமா, சூரிய சக்தி உற்பத்தி செய்யும் ஒரு கிராமம், சியாரா லீஒனில் உள்ளதென்று?"
-
16:10 - 16:13அவர் "இல்லை" என்றார். பாதி அமைச்சரவை அந்த பாட்டிகளை, சந்திக்க சென்றது அடுத்த நாள்.
-
16:13 - 16:15"சரி, கதை தான் என்ன?"
-
16:15 - 16:19அவர் என்னை அழைத்து கேட்டார், "உங்களால் 150 மூதாட்டிகளை பயிற்சியளிக்க முடியுமா?"
-
16:19 - 16:21"இல்லை, என்னால் முடியாது, ஜனாதிபதி அவர்களே.
-
16:21 - 16:23ஆனால், இந்த மூதாட்டிகளால் முடியும்", என்றேன்.
-
16:23 - 16:26அதனால், அவர் எனக்கு சியாரா லீஒனின் முதல் வெறுங்கால் பயிற்சி மையத்தை உருவாக்கிக் கொடுத்தார்.
-
16:26 - 16:30150 மூதாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, சியாரா லீஒனில்.
-
16:30 - 16:32காம்பியா:
-
16:32 - 16:35நாங்கள் ஒரு மூதாட்டியை தேர்வு செய்ய சென்றோம் காம்பியாவிற்கு.
-
16:35 - 16:37இந்த கிராமத்திற்கு சென்றோம்.
-
16:37 - 16:39அங்கே எந்த பெண்மணியை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் முடிவு செய்தேன்.
-
16:39 - 16:42ஆனால், அவர்களின் சமூகம் ஒன்று சேர்ந்து, "இந்த இரண்டு பெண்மணிகளை கூடிக்கொண்டு செல்லுங்கள்", என்றனர்.
-
16:42 - 16:44நான் சொன்னேன், "இல்லை, நான் இந்த பெண்மணியைத் தான் அழைத்து செல்வேன்"
-
16:44 - 16:46அவர்கள், " ஏன்? அவர்களுக்கு மொழி தெரியாது. உனக்கு அவள் பரிச்சியமில்லை." என்று கூறினர்.
-
16:46 - 16:49"அவரின் உடல் மொழி நன்றாக உள்ளது. அவர் பேசும் விதம் எங்களுக்கு பிடித்து இருக்கிறது." என்றேன்.
-
16:49 - 16:51"சாத்தியம் இல்லை. கணவன் ஒப்புக்கொள்ள மாட்டான்."
-
16:51 - 16:53கணவனை அழைத்தேன். அவர் வந்தார்.
-
16:53 - 16:56அவர் ஒரு அரசியல்வாதி, கையில் அலைபேசி கொண்டு வந்தார். "முடியாது" என்றார்.
-
16:56 - 16:59"ஏன்", என்றேன். "பாருங்கள், அவள் எவ்வளவு அழகாக உள்ளாள்."
-
16:59 - 17:01நான் சொன்னேன், " ஆமாம், அழகாகவே உள்ளாள்."
-
17:01 - 17:03"அவள் ஒரு இந்தியனோடு ஓடிப்போய்விட்டாள் என்றால் என்னாவது?"
-
17:03 - 17:05அது தான் அவரின் பெரிய பயமாக இருந்தது.
-
17:05 - 17:08நான் சொன்னேன், "அவள் சந்தோஷமாக இருப்பாள். அவள் உன்னிடம் அலைபேசியில் பேசுவாள்."
-
17:08 - 17:11அவள் ஒரு மூதாட்டி போல் சென்று,
-
17:11 - 17:13ஒரு புலியைப் போல் திரும்பி வந்தாள்.
-
17:13 - 17:15அவள் விமானத்திலிருந்து இறங்கி நடந்தாள்.
-
17:15 - 17:18மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போல், பத்தரிக்கைகாரர்களிடம் பேசினாள்.
-
17:18 - 17:21அவள் தேசிய பத்தரிக்கைகாரர்களுக்கு அபாரமாக பேட்டி அளித்து,
-
17:21 - 17:23ஒரு மாபெரும் நட்சத்திரமாகிவிட்டாள்.
-
17:23 - 17:26நான் ஆறு மாதங்களுக்கு பிறகு, திரும்பி அங்கு சென்றேன். அவளிடம் கேட்டேன், "எங்கே உங்களுடைய கணவர்?"
-
17:26 - 17:28"அவரா, இங்கே எங்கயோ இருந்தார். அது முக்கியமில்லை."
-
17:28 - 17:30(சிரிப்பொலி)
-
17:30 - 17:32இது ஒரு வெற்றிக் கதை.
-
17:32 - 17:34(சிரிப்பொலி)
-
17:34 - 17:37(கைத்தட்டல்)
-
17:37 - 17:43நான் என் உரையை முடித்துக்கொள்ளும் முன்பு, சொல்ல விரும்புவது என்னவென்றால்
-
17:43 - 17:47நாம் வெளியே சென்று தீர்வுகள் கண்டுபிடிக்க தேவையில்லை.
-
17:47 - 17:49தீர்வுகள் நமக்கு அருகேயே தேடலாம்.
-
17:49 - 17:52மக்கள் சொல்வதை கேட்கலாம். அவர்கள் தீர்வுகளை நம்முன் வைத்துள்ளார்கள்.
-
17:52 - 17:54அவர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள்.
-
17:54 - 17:56நாம் கவலைப்பட அவசியமே இல்லை.
-
17:56 - 17:59உலக வங்கி சொல்வதை நாம் கேட்க தேவையில்லை. நம்முடன் இருக்கும் மக்கள் சொல்வதை கேட்டால் போதும்.
-
17:59 - 18:02அவர்கள் இந்த உலகத்திலுள்ள அனைத்து தீர்வுகளையும் அறிவர்.
-
18:02 - 18:05நான் மகாத்மா காந்தியின் வார்த்தைகளைக்கொண்டு என் உரையை நிறைவு செய்கிறேன்.
-
18:05 - 18:07"முதலில் அவர்கள் உங்களை பொருட்படுத்தமாட்டார்கள்,
-
18:07 - 18:09பிறகு உங்களை கேலி செய்வார்கள்,
-
18:09 - 18:11பிறகு உங்களிடம் சண்டையிடுவார்கள்,
-
18:11 - 18:13அதன், பிறகு நீங்கள் வெல்வீர்கள்."
-
18:13 - 18:15நன்றி.
-
18:15 - 18:46(கைத்தட்டல்)
- Title:
- பங்கர் ராய் - ஒரு வெறுங்கால் இயக்கத்தின் மூலம் கற்றுகொள்ளக்கூடிய பாடங்கள்
- Speaker:
- பங்கர் ராய்
- Description:
-
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு அசாதாரமான கல்லூரி ஒன்று பாமர மக்களை கற்றுத்தந்துக்கொண்டிருகிறது. படிக்காதவர்களாகிய அவர்களை, சூரிய சக்தி பொறியாளர்களாகவும், பல் மருத்துவர்களாகவும், மருத்துவர்களாகவும், கைவினைஞர்களாகவும் மாற்றிகொண்டிருக்கிறது. அந்த கல்லூரியின் பெயர் வெறுங்கால் கல்லூரி. அதை தொடங்கியவர் பங்கர் ராய் அவர்கள். இந்த உரையில் அவர் அக்கல்லூரி எப்படி செயல்படுகிறது என்பதை கூறுகிறார்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 18:47
![]() |
Dimitra Papageorgiou approved Tamil subtitles for Learning from a barefoot movement | |
![]() |
Vijaya Sankar N accepted Tamil subtitles for Learning from a barefoot movement | |
![]() |
Vijaya Sankar N edited Tamil subtitles for Learning from a barefoot movement | |
![]() |
Vijaya Sankar N edited Tamil subtitles for Learning from a barefoot movement | |
![]() |
Pavithra Solai Jawahar edited Tamil subtitles for Learning from a barefoot movement | |
![]() |
Pavithra Solai Jawahar edited Tamil subtitles for Learning from a barefoot movement | |
![]() |
Pavithra Solai Jawahar edited Tamil subtitles for Learning from a barefoot movement | |
![]() |
Pavithra Solai Jawahar edited Tamil subtitles for Learning from a barefoot movement |