-
கடலில் வாழும் பயங்கரமான விலங்கு சுறா.அதனால் அதைச் சாப்பிடுவதற்கு எதற்கும் தைரியம் இருக்காது.
-
அப்படியானால், கடல், சுறாவால் நிறைந்திருக்குமே.அப்படி ஏன் இல்லை?
-
அந்தக் கேள்விக்குப் பதில்" உணவுச் சங்கிலி".
-
உணவுச் சங்கிலியைப் புரிந்து கொள்ள முதலில் நாம் உணவு,சக்தி இவைகளைப் புரிந்து கொள்ளவேண்டும்.
-
நாம் சக்தியைப் பெறுவதற்கு உணவை,காலை,மதிய இரவு உணவுகளாக உண்கிறோம்.
-
கிடைக்கும் சக்தியை என்ன செய்கிறோம்?
-
வேலை செய்யப் பயன்படுத்துகிறோம்.
-
நம் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
-
உன் மேல் எப்படியுள்ளது
-
கொஞ்சம் சூடாக உள்ளதா?
-
உணவுப் பொருட்கள் பிரிபடும்பொழுது உண்டாகும்
-
சக்தியில் கொஞ்ச பாகம் வெப்பமாகி வீணாகிறது.உணவில் உள்ள சக்தியை நம் உடல் வளர்ச்சிக்கும்
-
வேலை செய்வதற்கும்மற்றும் வெப்பம்,கழிவுகள் உண்டாவதற்கும் பயன்படுத்துகிறோம்.
-
கடல் தாவரங்களும் அவைகளுக்கு வேண்டிய சக்தியை உணவிலிருந்து பெறுகின்றன.அவை சாப்பிடும் உணவுகளை வைத்து அவற்றைப் பிரிக்கலாம்.
-
உணவை உற்பத்தி செய்யும் உயிரினங்கள் தொழிற்சாலை போன்று தங்கள் உணவை தாங்களே தயாரிக்கின்றன.
-
உதாரணத்திற்கு கடற்பாசிகள்,நுண்ணிய மிதவைத் தாவரநுண்ணுயிர்கள் இவைகள் சூரிய வெளிச்சம் மற்றும் தங்கள் சூழலில் கிடைக்கும் சக்திகளைக் கொண்டுஉணவைத் தயாரிக்கின்றன.
-
நுகர்வோர் பங்கில் உணவு தயாரிப்பதில்லை.மற்ற உயிரினங்களை அழித்து சாப்பிடப்படுகிறது.
-
நுகர்வோர் பக்கம் மனிதர்கள்.அதே போல் நீர் நாய்.சுறா,மீன்.நீர்க்கீரி,கடல் முள்ளெலி போன்றவையும் மற்ற உயிரினங்களை உண்ணுகிறது.
-
சில உயிரினங்கள் கழிவுகள்,இறந்த உயிரினங்களின் உடல்கள் போன்றவற்றை உண்கிறது.
-
இவைகள் சிதைப்பிகள் ஆகும்.உதாரணம் இறால்மீன்,பாக்டீரியா.
-
இவ்வாறு வெவ்வேறு குழுக்கள் உணவுச் சங்கிலியால் இணைக்கப்படுகிறது.
-
உணவுச்சங்கிலியின் மூலம் சுற்றுச்சூழலில் எது எதை உண்கிறது என்பது தெரியும்.
-
உணவைத் தயாரிக்கும் உற்பத்தியாளரிடமிருந்து ஆரம்பிக்கிறது உணவுச்சங்கிலி.உற்பத்தியாளர்கள், முதல் குரூப் நுகர்வோரால் உண்ணப்படுகிறது
-
.முதல் குரூப் இரண்டாவது குரூப் நுகர்வோரால் உண்ணப்படுகிறது.பின் மூன்றாவது நான்காவதால் உண்ணப்படுகிறது.
-
(உ.ம்) கடற்பாசி>கடல்முள்ளெலி>நீர்க்கீரி > சுறா என்ற ரீதியில் உணவுச் சங்கிலி தொடர்கிறது.
-
அல்லது தாவரமிதவை நுண்ணுயிர்கள் > மீன்> கடல்நாய் > சுறா
-
விலங்குகள் வித்தியாசமாக இருந்தாலும் கருத்து ஒன்றாக உள்ளது.
-
உணவுச்சங்கிலி, உற்பத்தியாளரில் ஆரம்பித்து நுகர்வோரில் முடிகிறது.
-
ஏன் அப்படி?
-
உணவுச்சங்கிலி யார் யாரைச் சாப்பிடுகிறார்கள் என்பதை மட்டும் தெரிவிக்காது.
-
சக்தியை நாம் சாப்பிடும் உணவிலிருந்து பெறுகிறோம்.உணவுச் சங்கிலி உணவுத் தொடரைக் காட்டுகிறது.
-
உணவுச் சங்கிலி உற்பத்தியாளரிடமிருந்து ஆரம்பிக்கக் காரணம் அவைதான் சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி முதலில் உணவைத் தயாரிக்கிறது.
-
இந்த உணவுதான் உணவுச் சங்கிலியில் வரும் மற்ற உணவுகளுக்கு மூலகாரணம்.
-
உணவை உயிரினங்கள் வளர்ச்சிக்கும் உடல் பருமனுக்கு மட்டும் உபயோகப்படுத்துவதில்லை.வேலை செய்வதற்கும் மற்ற கழிவுகள் வெப்பத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
-
நுகர்வோர் பங்கில் வளர்ச்சிக்கான சக்தியை மட்டும்தான் பெறமுடியும்.
-
ஆகவே பத்து சதவிகித அளவு சக்திதான் உணவுச் சங்கிலியில் அடுத்ததிற்கு மாற்றப்படுகிறது.
-
சக்தி மாற்றம் எவ்வளவு என்று கணக்கிட்டால் பிரமிட் அளவு ஆகும்.
-
உற்பத்தியாளர்கள் பிரமிடின் அடித்தளம்.ஏனெனில் உணவைத் தயாரிப்பதால்.
-
உணவுத் தொடரில் கீழுள்ள நுகர்வோர் வேலை,வெப்பம்,கழிவு இவற்றிற்காக சக்தியை செலவிட்டுவிடுவதால் பிரமிடின் மேலுள்ள நுகர்வோர்க்கு சக்தி அதிகம் கிடைப்பதில்லை.
-
உணவுத் தொடர் மாதிரியில் முதல்,இரண்டாவது,மூன்றாவது நுகர்வோர் மட்டும் உள்ளனர்.
-
நான்கு ,ஐந்து இல்லை.
-
ஏனெனில் அவைகளுக்கு அதிகஉணவுச் சக்திகிடைப்பது இல்லை.
-
சுறாவைச் சாப்பிட ஆள்இல்லை என்றாலும் ஏன் அதன் தொகை கடலில் அதிகமாவதில்லை என்பது புரிந்திருக்கும்
-
அதன் தொகை அதிகமானால் தேவையான உணவும்
-
சக்தியும் அவைகளுக்குக் கிடைக்காது.
-
உணவுச் சங்கிலியில் சுறாதான் நுகர்வோரில் அதிக பங்கு வகிக்கிறது.
-
ஏனென்றால் நீ கேரட்,மாட்டிரைச்சி என பலவகையான உணவுகளை உண்பதுபோல் மற்ற விலங்குகளும் பலவிதமான உணவுகளை உண்கின்றன.
-
நீர்நாய், சிப்பிமீன்கள்,பென்குவின் இவைகளைச் சாப்பிடுகிறது.மீன்,நத்தைகள் கடற்பாசிகளைச் சாப்பிடுகின்றன.
-
இவ்வாறு சுற்றுச் சூழல் உணவுச் சங்கிலியில் வித்தியாசங்கள் உள்ளது.
-
உணவுச் சங்கிலிகளை இணைத்து உணவுவலை உண்டுபண்ணலாம்.
-
சுற்றுச் சூழலின் நிலையை படம்பிடித்தாற்போல் உணவுவலை காட்டுகிறது.
-
துரதிஷ்டமாக கடல் சார்ந்த உணவுவலையைப் பொறுத்தவரை மனிதனின் தாக்கம் அதிகம்.
-
ஒரு விதத்தில் நாம் சுறாவின் தொகையைக் குறைத்துவிட்டோம்.
-
சுறா மீன்களை அதன் சிறகுகளுக்காக (சூப் தயாரிக்க)அல்லது சூரை மீன்களை பிடிக்கும்பொழுது தவறுதலாக வலையில் மாட்டி அழிகின்றன.
-
இவ்வாற நூறு மில்லியன் சுறாக்கள்வரை ஒவ்வொரு வருடமும் கொல்லப்படுகின்றன.
-
சுவிட்சர்லேண்ட்,கனடா,கம்போடியா,டென்மார்க்,ஆஸ்ட்ரேலியா,ஜிம்பாவே ஆகிய நாடுகளின் மக்கட்தொகைக்கு சமம் அதன் இறப்புத் தொகை.
-
நுகர்வோர் பக்கம் சுறாக்கள்தான் அதிகம்.இது நல்லதில்லை.
-
அப்படியென்றால் சுறாக்கள் மற்ற உயிரினங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
-
உதாரணத்திற்கு எல்லா சுறாக்களையும் அழித்துவிட்டால் நீர்நாய்கள் பெருகி மீன்கள் இனத்தை அழித்துவிடும்
-
சுற்றுச் சூழல் பாழாகிவிடும்.
-
ஆகவே சுறாக்களைப் பாதுகாக்க நீ என்ன செய்யவேண்டும்?
-
முதலில் சுறாக்களின் சிறகு சூப்புகளைக் குடிக்காதே.
-
மீன்களை மட்டுமே பிடிக்கும் வலைகளில் உள்ள மீன்களை வாங்கி உண்.
-
சுறாக்கள் நுகர்வோர் பங்கில் அதிகம் இருந்தாலும் அவைகளும் மனிதர்களைப் போல்தான்.
-
உணவுச் சங்கிலியை அழிக்கக் கூடாது என விரும்பினால் உண்பதில் நாம் பொறுப்பாக இருக்க வேண்டும்.