எனக்குத் தற்போது சளி பிடித்திருந்ததால் இந்தக் காணொளியில் விவரிக்க வைரசுகள்தான் பொருத்தமான தலைப்பாகப்பட்டது. கிருமி அல்லது கிருமிகள். கிருமிகள். என்னைப் பொருத்தவரை இந்தக் கிருமிகள் சிலநிலையில் உயிரியலில் மிகவும் கவர்ச்சியான விசயங்களாக உள்ளன. ஏனெனில் அவைகள் உயிரற்றது உயிருள்ளது இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள எல்லைக் கோட்டை தெளிவற்றதாக்கிவிடுகிறது. நம்மையும் எடுத்துக்கொள்வோம். அவைகளையும் எடுத்துக் கொள்வோம். ஒன்று பிறந்தால் அதற்கு வளர்ச்சி உண்டு, தொடர்ந்து மாற்றம் உண்டு. இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இயக்கம் கூட இருக்கலாம். இயக்கம் இல்லாமலும் இருக்கலாம். அவை தன்னில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இனப்பெருக்கம் செய்கிறது.பிறகு இறந்து விடுகிறது. வாழ்க்கையின் சாத்தியக் கூறுகள் இவைதான். இதில் நிறைய விசயங்களைப் பார்க்கிறோம். அல்லது இதில் கொண்டு வருகிறோம். இதில் பாக்டீரியாக்களைக் கொண்டுவருகிறோம். தாவரங்களைக் கொண்டுவருகிறோம். வகைப்பாட்டியலை நான் சிதைப்பது போல் தோன்றுகிறது. ஒன்று உயிரினமா என்று நாம் ஒன்றைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்வோம் எல்லாக் கிருமிகளும் புரதத்துக்குள் மரபணு தகவல்களைத்தான் கொண்டிருக்கும். புரத உறைக்குள் இதை இங்கு வரைகிறேன். மரபணுத் தகவல்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரமுடியும். அது ரைபோகரு அமிலமாக இருக்கலாம் ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலமாக இருக்கலாம் தனி இழைகளைக் கொண்ட ரைபோகரு அமிலமாக இருக்கலாம் அல்லது இரு இழைகளைக் கொண்ட ரைபோகரு அமிலமாக இருக்கலாம்.தனி இழைகளைக் கொண்ட ரைபோகரு அமிலத்திற்கு இரண்டு சிறிய S's களை அதன் முன் போடுவர். இருஇழைகளைக் கொண்ட ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலமாக இருந்தால் அதற்கு ds ஐ அதன் முன் போடுவர். பொதுவான கருத்து இங்கு என்னவென்றால் கிருமிகள் இந்த எல்லா ரூபத்திலும் வரலாம். அவைகள் எல்லாமும் மரபணுத் தகவல்களைக் கொண்டுள்ளது. சில கருவமிலங்களின் சங்கிலிகள். தனி இழை அல்லது இருஇழைகளைக் கொண்ட ரைபோகரு அமிலம் அல்லது இருஇழைகளைக் கொண்ட ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் இதில் ஏதாவதொன்றாக இருக்கலாம். இவை ஏதாவது ஒரு புரதஅமைப்பினுள் இருக்கும். இவ்வாறு புரதத்தால் சூழப்பட்ட இதை காப்ஃசிட் என்பர். இதன் வரைபடம் இருபதுமுகங்களைக் கொண்டதைப் போல் உள்ளது. சரியாகச் செய்திருக்கிறேனா எனப் பார்க்கிறேன். இப்படித்தான் இது பார்வைக்கு இருக்கும். ஆனால் எல்லாக் கிருமிகளும் பார்வைக்கு இவ்வாறு இருக்காது. கிருமிகளில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. நாம் மேலோட்டமாகத்தான் இதுபற்றிப் பார்த்துக் கொண்டுள்ளோம். இந்தக் கிருமிகள் என்றால் என்ன அவை எவ்வாறு விருத்தி செய்துகொள்கிறது என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். மேலும் இதைப்பற்றி நிறைய அடுத்து வரும் காணொளிகளிலும் பார்ப்போம். கிருமிகள் உலகில், அவைகள் பெருக்கமடைய சாதகமான வழிகள் இருக்கின்றன என நான் சந்தேகிக்கிறேன். ஆனால் இதற்கு உண்மையான காரணம் புரதம்தான். இந்த புரத காப்ஃசிட், புரதங்கள் சேர்ந்துதான் உண்டாகிறது. உள்ளே இருப்பது மரபணுப் பொருள். ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் அல்லது ரைபோகரு அமிலம் இப்பொழுது அந்த மரபணுப் பொருளை வரைகிறேன். புரதம் வெளிப்படையாகத் தெரியாது.அப்படித் தெரிந்தால் அதனுள் இருக்கும் மரபணுப் பொருள்களைப் பார்க்கமுடியும். கேள்வி என்னவென்றால் இவற்றிற்கு உயிர் உண்டா? பார்க்கப் போனால் உயிரற்றதாகத்தான் தெரிகிறது. இதற்கு வளர்ச்சி இல்லை .மாற்றம் இல்லை. எந்த வளர்ச்சிதைவு மாற்றமும் இல்லை. அதன் வழியில் இருந்து கொள்கிறது.இது எப்படி என்றால் மேசைமேல் வைக்கப்பட்ட ஒரு புத்தகம் எப்படி அதே இடத்தில் அப்படியே இருக்கிறதோ அப்படி இருந்து கொள்கிறது எதையும் மாற்றுவது இல்லை. இப்படி இதைப்பற்றிக் கூறுவதால் சர்ச்சை எழுகிறது. நான் என்ன சொல்கிறேனென்றால்,சால் ,நீங்கள் இம்முறையில் இதை வரையறை செய்யும்பொழுது என்ன புரிகிறது என்றால் சில கொத்தான மூலக்கூறுகள் ஒன்றாகச் சேர்வதால் அவற்றிற்கு உயிர்வடிவம் கிடையாது என்பது. ஆனால், நாம் உயிர்வடிவம் என்று கருதுவதின் மீது அது தொடர்பு கொள்ளும்போது அதற்கு திடீரென்று உயிர்வந்துவிடுவது போல் தோன்றுகிறது. ஆகையால்,கிருமிகள் என்ன செய்கிறது என்றால் ஒரு அணுவுடன் ஒட்டிக்கொள்கிறது. இதைக் கொஞ்சம் சிறியதாக வரைகிறேன். இதுதான் நான் வரைந்துள்ள கிருமி. இதை ஒரு அறுகோணத்தைப் போன்று வரைகிறேன். இது என்ன செய்கிறது என்றால் ஒரு செல்லுடன் ஒட்டிக்கொள்கிறது. எம்மாதிரியான செல்லுடனும் ஒட்டிக்கொள்கிறது. பாக்டிரியாவின் செல்லாக இருக்கலாம்,ஒரு மரத்தின் செல்லாக இருக்கலாம் மனிதனின் செல்லாகக் கூட இருக்கலாம். ஒரு செல்லின் படத்தை இங்கு வரைகிறேன். செல்கள் கிருமிகளைவிடப் பெரியதாகவே இருக்கும். மென்மையான சவ்வுகளைக் கொண்ட செல்களில் உள்ளே நுழைய கிருமிகள் வழி கண்டுபிடிக்கும். சிலநேரங்களில் செல்களுடன் அப்படியே ஒன்று சேர்ந்துவிடும். ஆனால்,நான் இந்தப் பிரச்சனையைச் சிக்கலாக்க விரும்பவில்லை. சிலநேரங்களில் அவைகளைச் சுற்றி மென்மையான சவ்வுகள் உண்டாகிறது. ஒரு வினாடி நேரம் இவைகளுக்கு இந்தச் சவ்வுகளை எப்படிப் பெறுகின்றன எனப் பார்ப்போம். கிருமிகளுக்கு அவைகளின் சவ்வுகளே இருக்கிறது. அந்தக் கேப்ஃசிட்டைச் சுற்றி இந்தச் சவ்வுகள் செல்களில் ஒட்டி இணைகிறது. அதன்பின் கிருமிகள் செல்களுக்குள் நுழைகிறது. இது ஒரு முறை. வேறொரு முறை ஆனால் எப்பொழுதும் இதே வழியில் நடக்காது. வேறொரு வழி என்னவென்றால் கிருமிகள்,செல்களில் உள்ள புரத உணர்பொறிகளை சரிகட்டி சமாதானப்படுத்திவிடுகிறது. ட்ரோஜன் குதிரை வகை விசயமாகிவிடுகிறது. செல்களுக்கு இந்தக் கிருமிகள் தேவையில்லை. எப்படியோ இந்தக் கிருமிகள் செல்களை அவைகள் அயல்துகள்கள் இல்லை என்று சரிகட்டி சமாதானப்படுத்துகிறது. கிருமிகள் வேலை செய்யும்விதத்தைப்பற்றி நூற்றுக்கணக்கான காணொளிகளை நம்மால் தயாரிக்க முடியும்.அவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. சில நேரங்களில் கிருமிகள் செல்களால் உட்கொள்ளப்படுகின்றன. அப்பொழுது அந்த செல் இவை உட்கொள்ளக்கூடியவை என எண்ணியிருக்கலாம். இவ்வாறு செல் அதை மூடிக்கொள்கிறது. பின், பக்கங்கள் ஒன்றாகிவிடுகிறது. கிருமிகள் இப்பொழுது உள்ளே நுழைந்து விடுகிறது. இதற்கு உயிரணு உள்வாங்கல் என்று பெயர். இதைப்பற்றி இப்பொழுது கூறுகிறேன். குழியமுதலுருவிற்குள் இது செல்கிறது. கிருமிகளுக்கு மட்டும் இது ஏற்படாது. செல்லினுள் நுழைவதற்கு இது ஒரு முறை. செல்லைப்பற்றிப் பார்க்கும்பொழுது உதாரணத்திற்கு பாக்டீரியாக்களை எடுத்துக் கொள்வோம். இந்தச் செல்லுக்கு கடினமான சவ்வு இருப்பதால், இதற்கு நல்ல நிறம் கொடுக்கிறேன். இங்கிருப்பது பாக்டீரியா.இதற்குக் கெட்டியான மேல் ஒடு இருக்கிறது. கிருமிகளால் இதற்குள் நுழையவே முடியாது. செல்லின் வெளிப்பாகத்தில் இப்படித்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். தோராயமாக , அளவெடுக்காமல் வரைந்தது. ஆனாலும் அவைகளின் மரபுப்பொருளை அதனுள் செலுத்துகிறது. ஆகவே,கிருமிகள் , செல்லினுள் நுழைவதற்கு பலவிதமான வழிகள் உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால்,இது இங்கு முக்கியமான விசயம் இல்லை. இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் கிருமிகள் செல்லினுள் நுழைகிறது. செல்லினுள் நுழைந்தவுடன் அவைகள் தங்களின் மரபுப்பொருளை வெளிவிடுகிறது. ஆக,அதன் மரபுப்பொருள் செல்லினுள் மிதந்து கொண்டிருக்கிறது. அவைகளின் மரபுப்பொருள் ரைபோகருஅமிலத்தைப் போல் இருந்தால் அவைகள் இயற்கையாகவே பிழைத்திருக்க பலவிதமான சாத்தியக்கூறுகள் இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது நாம் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ,நாம் முன்பே கண்டுபிடித்தவை இவ்வாறுதான் சாத்தியமான வழியில் போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே,அவைகளுக்கு ரைபோகருஅமிலம் இருந்தால்,அவை உடனே செயலில் இறங்குகிறது. இது செல்லின் உட்கரு. இது செல்லின் உட்கரு.இதில் சாதாரணமாக ஆக்ஸிஜனற்ற ரைபோ அமிலம் இருக்கும். ஆக்ஸிஜனற்ற ரைபோ அமிலத்திற்கு வேறு நிறம் கொடுக்கிறேன். ஆக்ஸிஜனற்ற ரைபோ அமிலத்தின் வேறுபிரதிதான் ரைபோகரு அமிலம். இது சாதாரணமாக வேலை செய்யக் கூடிய செல். கருவில் உள்ள ரைபோகரு அமிலம் அங்கிருந்து ரைபோசோம்களுக்குச் செல்கிறது. அங்கு அவை புரதங்களைத் தயார் செய்கிறது. ரைபோகரு அமிலத்தில் வெவ்வேறு புரதங்களுக்கான குறியீடுகள் உள்ளன. வேறொரு காணொளியில் இதைப்பற்றிக் கூறுகிறேன். இவ்வாறு இந்தப் புரதங்கள் உண்டாகி பலவிதமான அமைப்புக்களில் செல்லினுள் இருக்கின்றன. இப்பொழுது இந்தக் கிருமிகள் என்ன செய்கிறது என்றால் இந்தச் செயல்முறையை அப்படியே தனதாக்கிக் கொள்கிறது. கிருமிகளில் இருக்கும் ரைபோகருஅமிலம் செல்லினுள் இருந்த ரைபோகருஅமிலம் செய்வதைப் போல் செய்ய ஆரம்பிக்கிறது. அதன் சொந்தப் புரதங்களுக்கு குறியீடுகளை தயார் செய்கிறது. ஆனால்,இவைகள் அதே குறியீடுகளை உண்டாக்காது.மாறாக இவைகள் உண்டாக்கும் முதல் புரதங்களில் அதன் குறியீடுகள் ஆக்ஸிஜனற்ற கருஅமிலத்தையும் ரைபோகரு அமிலத்தையும் அழிப்பவையாக இருக்கும். இல்லாவிடில் இவைகளுடன் போட்டியிடவேண்டியிருக்கும். தங்களுடைய புரதங்களை அவைகளே குறியீடிட்டுக் கொள்கின்றன. இந்த புரதங்கள் தங்கள் வேலையை ஆரம்பிக்கின்றன. இந்தப் புரதங்கள் நிறைய அளவில் வைரஸ்களை உண்டாக்குகிறது. அதே சமயம் கிருமியில் உள்ள ரைபோகரு அமிலம் நகலுருவாக்கலை தொடருகிறது. இதில் உள்நுழைந்த செல்லின் செயல்முறையைத் தனதாக்கி வேலையைத் தொடர்கிறது. ஒரு முறை செல்லுக்குள் நுழைந்தால் அங்கிருக்கும் செயல்முறையை பிரதியெடுத்து அதைத் தன்வழியில் பயன்படுத்திக் கொள்கிறது. இவற்றின் உயிர்வேதியல் திகைப்பாக உள்ளது. பிறகு இந்த ரைபோகரு அமிலங்கள் கேப்சிட்டுக்குள் வருகிறது. இவை நிறைய வந்து சேர்ந்தவுடன் செல்லின் ஆதாரங்கள் குறைந்து விடுகிறது. செல்லின் செயல்முறையை பிரதியெடுத்துப் பெருகிய இந்த சுதந்திரமான கிருமிகள் செல்லைவிட்டு வெளியேற வழி கண்டுபிடிக்கிறது. இதை நான் குறிப்பாகச் சொல்லவில்லை .ஏனெனில் இன்னும் கண்டுபிடிக்காத கிருமிகள் நிறைய உள்ளன. ஆனால் இவை பற்றி அதிகம் பேசப்படுவது என்னவென்றால் இவைகள் அதிகமானவுடன் புரதங்களை வெளிவிடும் அல்லது அமைக்கும். தாங்களே சொந்தமாக உருவாக்காது. இதன் காரணமாக ஒன்று செல்கள் தாங்களாகவே மடிந்து விடும் அல்லது அதன் சவ்வு உறைகள் கரைந்துவிடும். ஆகையால் அதன் சவ்வு உறைகள் கரைந்துவிடும். அடிப்படையில் செல்கள் சிதைந்துவிடும். இதை இங்கு எழுதுகிறேன். செல் சிதைவுகள். சிதைவு என்றால் அந்த செல்லின் சவ்வுகள் மறைந்துவிடும். உள்வந்த கிருமிகள் இப்பொழுது தங்களை வெளிப்படுத்துகின்றன. நான் முன்பு கூறியதுபோல் சிலவற்றிற்கு அவைகளைச் சுற்றி அவைகளின் சவ்வே இருக்கும். ஆனால்,இம்மாதிரியான சவ்வுகளை அவைகள் எங்கிருந்து பெற்றன? சில என்ன செய்கின்றன என்றால் செல்லினுள் நுழைந்து பிரதியெடுத்தல் முடிந்ததும் செல்களை மாய்க்காமல் செல்சிதைவைக்கூட ஏற்படுத்தாமல் செல்லில் இருந்து வெளியேறிவிடுகின்றன. நான் கூறியவையெல்லாம் ஒரு வைரஸ் எப்டியெல்லாம் உள்நுழைந்து வேலை செய்கிறது என்பது பற்றி. வைரஸ்கள் ஆராயும் தன்மை கொண்டதாக உள்ளது. பலவிதமான வைரஸ்கள் பலவிதமான கலப்பில் நகல்எடுத்து ,புரதங்களுக்கும் குறையீடிகளை உருவாக்கி பின் செல்லில் இருந்து தப்பிவிடுகிறது. இவற்றில் சில வெறும் துளிர்தான். அவைகள் பின் எப்படி செல்லின் சவ்வுகளைத் தள்ளிக்கொண்டிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்யமுடியும் என நினைக்கிறேன். நான் செல் சுவர் என்று சொல்லக்கூடாது. செல்லின் வெளிப்புறச் சவ்வு. அவைகள் சவ்வுகளை வெளித்தள்ளும்போது சவ்வுகளைக் கொஞ்சம் அவைகளுடன் எடுத்துக் கொள்கிறது. செல்களைவிட்டு வெளியேறும்போது அவைகளுக்கு உறைபோல் அந்த ச் சவ்வு இருக்கிறது. அந்தச் சவ்வு அதனுடன் ஒட்டியிருப்பது ஏன் அவைகளுக்கு உபயோகமாக இருக்கிறது என்றால் செல்களின் சவ்வை அவை கொண்டுள்ளதால் செல்களின் உருவத்தைக் கொண்டுள்ளதுபோல் ஒரு தோற்றம். ஆகவே,அது வேறொரு செல்லைத் தாக்கும்பொழுது அது அயல்பொருளாகத் தெரியாது. அதன் உண்மைத் தோற்றத்தில் இல்லாமல் வேறொன்றாக இருப்பது அதற்குச் சாதகமாக உள்ளது. இது உங்களுக்கு அசுவாரஸ்யமான விசயமாக இருக்காது . அது இன்னொரு உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற கருஅமிலத்தை தனதாக்கிக் கொண்டு அந்த உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற கருஅமிலத்தையே மாற்றிவிடுகிறது. இதற்குப் பொதுவான உதாரணம் எச் ஐ வி வைரஸ். இதை இங்கு எழுதுகிறேன். எச் ஐ வி வைரஸ்என்பது மீள்ஊட்டு நச்சு உயிரி ஆகும் .இதைப்பற்றியதும் சுவாரஸ்யமாக இருக்கும். அவைகள் என்ன செய்கிறது என்றால் அவைகளிலும் ரைபோகரு அமிலம் இருக்கும். அவை செல்லுக்குள் நுழைகிறது. செல்லுக்குள் அவை இப்படி இருக்கிறது. அவை அப்பொழுது ஒரு புரதத்துடன் உள் நுழைகிறது. ஒவ்வொரு முறையும் நீ சொல்கிறாய் இந்தப் புரதத்தை அவைகள் எங்கிருந்து பெறுகின்றன? மற்ற செல்களிடமிருந்து அமினோஅமிலங்கள்,ரைபோசோம்.கருஅமிலம் இவற்றைப் பெற்று அவைகளே புரதங்களை தயாரிக்கின்றன. ஆகவே,எந்தப் புரதங்கள் அவைகளிடம் இருந்தாலும் அவைகளை மற்ற செல்களிடமிருந்துதான் பெறுகிறது. ஆனால் அவை புரதத்தை ரிவேர்சு ட்ரன்ஸ்கரிப்டாகக் கொண்டுவருகிறது. அவைகளின் ரைபோகரு அமிலத்தை எடுத்து கட்டளைகளைக் கொடுத்து ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் வைக்கிறது. ரைபோகரு அமிலம் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலமாகிறது. முதன் முதலில் இதைக் கண்டுபிடித்தபொழுது ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் இருந்து ரைபோகரு அமிலத்திற்குச் செல்வதாக நினைத்தனர். ஆனால் இது அந்த முன்உதாரணத்தை மாற்றுகிறது ஆனால் கட்டளைகள் ரைபோகரு. அமிலத்திலிருந்து ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்திற்குச் செல்கிறது. ஒருவேளை அது தவறில்லையென்றால் அந்த ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தை அதுஉள் நுழைந்த செல்லின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் இணைந்துவிடும். ஆகவே,அந்த ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலமானது விருந்துவழங்கி உயிரணுவின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் சேர்ந்துவிடும். இங்கு மஞ்சள் நிறம் விருந்து வழங்கி செல்லின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம். இது அதன் உட்கரு. எங்கெல்லாம் வைரஸ் தொற்றுகிறதோ அங்கெல்லாம் அவைகள் மரபணுவை குழப்புகிறது. ஒவ்வொரு மனிதசெல்லிலும் 20பாக்டீரியா செல்கள் இருக்கின்றன என்று பாக்டீரியா பற்றிய காணொளியில் நான் கூறினேன் அவை நம்முடன் வாழ்கின்றன.நமக்கு உபயோகமாக இருக்கின்றன. நம்மில் ஒரு சிறு பகுதியாக இருக்கின்றன. இவ்வாறு அவை நம்மில் கலந்துள்ளன நம்மை அவைகள் மாற்றாது. ஆனால் இந்த மீள் ஊட்டு நச்சுயிரிகள் நம் மரபணு அமைப்பையே மாற்றிவிடுகின்றன. மரபணுக்கள் எனக்கு முக்கியமானவை.ஏனெனில் அவை நான் யாரென்று வரையறுக்கிறது. இந்த மீள் ஊட்டு நச்சுயிரிகள் உடலினுள் சென்று என்னுடைய மரபணுவின் அமைப்பையே அழிக்கப்பார்க்கிறது. அவைகள் ஆக்ஸிஜனற்ற ரைபோகருஅமிலத்துடன் சேர்ந்து அதன் பகுதியாக மாறுகிறது. பின் எப்பொழுதும்போல் இயற்கையாக உள்ள ஆக்ஸிஜனற்ற ரைபோகருஅமிலம் ரைபோகருஅமிலமாகி உண்மையான புரதத்தைத் தயாரித்து அதற்கான கட்டளைகளை தயாரிக்கிறது.சில நேரங்களில் செயலற்று எதுவும் செய்யாமல் இருக்கும். சில வேளைகளில் சுற்றுச்சூழல் தூண்டுதலால் தூண்டப்பட்டு தன்னுடைய மரபுக்குறியீடுகளை உருவாக்க ஆரம்பித்துவிடும். நிறைய உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடும். அந்த உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற கருஅமிலத்திலிருந்தே அவற்றை உண்டாக்கும். அவை அந்த உயிரினத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது. ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தின் பகுதியாக இருப்பதைவிட அந்த உயிரினத்தின் பகுதியாக இருப்பது நெருக்கமான வழி என நினைக்கிறேன். ஒரு உயிரினத்தை வரையறுக்க இதைவிட வேறுவழியைக் கற்பனைசெய்யமுடியவில்லை. இங்கு என்ன கருத்து என்றால் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தின் ஒரு பகுதி ஆகி அதற்குச் சார்பான ஒரு வைரசாக இருக்கிறது. இம்மாதிரி அவை இல்லாவிட்டால் என்னுடைய மூக்கில் உள்ள செல்களை தாக்கும்.கையில் உள்ள செல்களைத் தொற்றும்.ஏன் அணுப்பிளவுகளையே உண்டாக்கும். ஆனால் அவர்களின் குழந்தைகளும் அந்த கிருமிகள் கலந்த ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தைத்தான் கொண்டிருக்கும். இது பரவாயில்லை.ஏனெனில் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராது. நல்லவேளையாக இனங்களின் பகுதியாக மாறாது. உடலியலுக்குரிய உயிரணுக்களைத்தான் தொற்றவேண்டும் என்றில்லை. கருவணுவைக் கூடத் தொற்றும். ஆகையால் ,இது கருவணுவுக்குள் செல்கிறது. கருவணுக்கள்தான் பாலணுவை உற்பத்தி செய்கிறது. என்பதுபற்றி நமக்கு முன்பே தெரியும். ஆணைப் பொருத்தவரை விந்து, பெண்ணைப் பொருத்தவரை முட்டையையும் உற்பத்திசெய்கிறது. ஒருமுறை கருவணுவை அது தொற்றினால் கருவணுவின் ஆக்ஸிஜனற்ற ரைபோஅமிலத்தின் ஒரு பகுதியாகி பின் பிள்ளைகளுக்கும் அது போய்ச் சேரும். பிள்ளைகள் எதிர்காலத்தில் தன் பிள்ளைகளுக்கு அதை மாற்றம் செய்வார்கள். இந்தக் கருத்து என் மனத்தில் கொஞ்சம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பொதுவாக என்ன மதிப்பீடு செய்கிறார்கள் என்றால் நம் உடலில் 5-8% கிருமிகள் உள்ளதாகக் கணக்கிடுகிறார்கள். நமது உடலில் எவ்வாறு பாக்டீரியாக்கள் இருந்து கொண்டுள்ளன என்பது பற்றி முன்பே கூறியுள்ளேன். சமீபத்திய இந்தக் கணக்கீட்டை நான் பலமுறைப் பார்த்துள்ளேன். சில இடங்களில் 5% சில இடங்களில் 8% என யூகிக்கிறேன்.எதை ஆதாரமாகக் கொண்டு இதைத் தீர்மானிக்கிறார்கள் என்றால் ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்தை எடுத்து மற்ற உயிரினங்களில் உள்ள ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்துடன் ஒப்பிடுகிறார்கள். மனிதமரபணுவில் 5-8% கிருமிகளிடமிருந்து வந்தவை எனக் கணக்கிட்டுள்ளார்கள். இந்தக் கிருமிகள் ஆரம்பகாலத்தில் மீள்ஊட்டு நச்சுயிரிகளிலிருந்து வந்தவை.மனித உடலில் ஐக்கியமாகி அவனுடைய ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் சேர்ந்து கொண்டது. இவைகள் உட்புறமீள்ஊட்டு நச்சுயிரிகள். இந்த விசயங்கள் பிரமிக்க வைக்கின்றன.ஏனெனில் இவைகள் நம் உடலுக்குள்ளேயே இருக்கின்றன. வெறுமனே இருக்கலாம்.நமக்கு உதவலாம். தீங்கும் செய்யலாம். ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்த்தில் 5-8% இந்தக் கிருமிகள்தான் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. வேறொரு விசயம் இங்கு பேசப்படுவது என்னவென்றால் மரபணு மாற்றம் பற்றியது. கிருமிகள் என்ன செய்கிறது என்றால் ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்த்தில் கிடைமட்ட பரிமாற்றத்தை ஏற்படுத்துகிறது. கிருமிகள் ஒரு இனத்தில் இருந்து இன்னொரு இனத்திற்கு செல்வதைப் பற்றி நீ கற்பனை செய்யலாம். இனம் A ல் இருந்து . இனம் B க்குச் செல்வதைப் போல் இப்பொழுது அது மாற்றம் அடைந்து செல்லுக்குள் ஊடுருவுகிறது. இந்தச் செயல்முறையின்போது அதனிடம் முன்பே உள்ள ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் மேலும் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறது அல்லது தயாரிக்கிறது. சில நேரங்களில் மற்றவைகளுக்காக இவை மரபணுக்கட்டளைகளை தயாரிக்கிறது. இங்கு உள்ளவை ஆதரவான கிருமிகள். ஊதா நிறத்தில் இருப்பவை உண்மையான கிருமிகள். மஞ்சள் நிறத்தில் இருப்பவை உயிரினத்தின் ஆரம்ப அல்லது வரலாற்று ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம். இது மரபணுக் குறியீடுகளை மற்ற உயிரினங்களின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்திலிருந்து கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் இதில் நிறைய பாகம் கிருமிகளின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம்தான் இருக்கும். ஆனால் அதை பிரதி எடுத்து மாற்றும்பொழுது முன்பு உயிரினத்தில் இருந்து பகிர்ந்து கொண்ட அச்சிறு பகுதி ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தையும் பிரதியெடுத்து மாற்றுகிறது. ஒரு உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தை வேறொரு உயிரினத்தில் சேர்க்கிறது. ஒரு இனத்தில் உள்ள உறுப்பினருடையதை எடுத்து இன்னொரு இனத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்கு சேர்த்துகிறது. அப்பொழுது இதில் கலப்பை உண்டாக்குகிறது. கிருமிகள் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் ஒரு இனத்தில் இருந்து இன்னொரு இனத்திற்குத் தாவுகிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாய். இனங்களில் ஒன்றோடொன்றுடன் தொடர்பு கொண்டுள்ளது .இந்த விசயத்தில் இதை நான் பாராட்ட வேண்டியதுதான். இதை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும். நம்மில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.மரபணு மாற்றங்கள் மக்களிடையே ஏற்படுகிறது. ஆனால், கிருமிகள் இந்தக் கிடை மாற்றத்தை நச்சுயிரியூடு பண்பக மாற்றம் மூலம் ஏற்படுத்துகிறது. கிருமிகளின் கிடை மாற்ற நச்சுயிரியூடு பண்பக மாற்றத்தின் போது அது சேர்ந்திருக்கும் உயிரினத்தின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தின் ஒரு சிறு பகுதியையும் சேர்த்து அதன் பிரதியாகிறது. அதை அடுத்த உயிரினத்தில் தொற்ற வைக்கிறது. ஆக இந்த ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம் ஓர் உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினத்திற்குத் தாவுகிறது. ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தை ஆதாரமாகக் கொண்ட அனைத்து உயிரினங்களையும் இந்தக் கிரகத்தில் ஒன்றாகச் சேர்த்துகிறது. இந்த விசயங்கள் எல்லாம் எரிச்சல் ஊட்டுபவையாக இருந்தால் இதை பின் வைத்துக் கொள்கிறேன். ஆனால்,கிருமிகளின் வகைகளைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது. அதில் உனக்கு சில கலைச்சொற்கள் தெரிந்திருக்க வேண்டும். பாக்டீரியாக்களை கிருமிகள் அடிக்கடித் தாக்கும். இவைகளைப் பற்றி நாம் நிறையப் படித்துள்ளோம். இவைகள் நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு ஒரு நல்ல மாற்று. கிருமிகள் தாக்கும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் கிருமிகளைவிட வலுவிழந்து இருக்கும். .அவற்றை கிருமிகள் விழுங்கிவிடும். இவைகளின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தைப் பற்றி முன்பே உங்களிடம் கூறியுள்ளேன். பாக்டீரியாக்களுக்கு மொத்தமான சுவர்கள் இருப்பதால் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தை உட்புகுத்திவிடும். ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் எந்த மாற்றத்தையும் உண்டாக்காமல் இருக்கும் கிருமிகளைப் பற்றியும் பேசினோம்.ஆனால் கிருமிகள் அழிக்க ஆரம்பித்தால் அது சிதை சுழற்சி ஆகிறது. உயிரியலில் ஏதாவது தேர்வு எழுதும்பொழுது உனக்கு இந்தத் துறைச்சொல் தேவைப்படலாம். அந்தக் கிருமிகள் விருந்தாளியின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் சேர்கிறது.அவ்வாறு சேர்ந்து சிறிது காலம் செயலற்று இருக்கிறது. இது நோய் தொற்றும் சுழற்சிக் காலம் ஆகும். விருந்தாளியின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்துடன் சேர்ந்த கிருமிகளின் இனப்பெருக்கமும் விருந்தாளியின் இனப்பெருக்கத்துடன் தொடருகிறது. இவை இருக்கும் இந்த உயிரினங்களின் செல்களுக்கு சவ்வு உறை உண்டு. பொதுவாக நோய்தொற்றும் சுழற்சியில் கிருமியின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம் பாக்டீரியாவின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் செயலற்று இருக்கும். அல்லது பாக்டீரியாக்களைக் கொல்லும் வைரல் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம் பாக்டீரியாவின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தில் செயலற்று இருக்கும். இதைப்பற்றிய ஒரு கருத்தைத் தரவேண்டி நான் விக்கிபீடியாவில் இருந்து இந்த இரண்டு படங்களையும் எடுத்து இங்குப் போட்டுள்ளேன். ஒன்று சி டி சி யில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தப் பரப்பின் மேல் பச்சைநிறப் புள்ளிகளைப் பார்க்கிறாய். இதில் பெரியதாகத் தெரிவது இரத்தத்தின் வெள்ளை அணுக்கள். இது மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் ஒரு பகுதி. இது இரத்தத்தின் வெள்ளை அணு. இரத்தத்தின் வெள்ளை அணுவின் மேற்பரப்பில் இருந்து அரும்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாய். இது உனக்கு ஒரு அபிப்பிராயத்தைத் தரும். இவை ஹெச்ஐவி -1 ன் வைரசுகள். இந்தத்துறைச்சொல் உனக்கு பழக்கப்பட்டவை.ஹெச்ஐவி -1 ன் வைரசுகள் இரத்தத்தின் வெள்ளை அணுக்களைத் தாக்கக்கூடியவை. இவை நோய் எதிர்ப்பு அமைப்பைத் தாக்கி வலுவிழக்கச் செய்யும்போது ஒரு கட்டத்தில் உடலில் இவை உண்டாகும் நோய், எய்ட்ஸ். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் துன்பப்படுவார்கள். நோய்எதிர்ப்பு அமைப்பு வலுவாக உள்ளவர்கள் அதிகம் கஷ்டப்பட மாட்டார்கள். இவை வெறுப்புண்டாக்கக் கூடியவை. அவை இந்த பெரிய செல்களின் உள்ளே நுழைந்து செல்களின் செயல்முறைகளை தன்னுடைய ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலத்தை தயாரிக்கப் பயன்படுத்துகிறது. அல்லது அதனுடைய ரைபோகரு அமிலம் மற்றும் புரத உறைகளையும் தயாரிக்கிறது. பின் அவை செல்லில் இருந்து அரும்பி அதனுடன் செல்லின் மென்படலத்தையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்கிறது. தன்னுடைய ஆக்ஸிஜனற்ற ரைபோ கரு அமிலத்தையும் இந்த செல்களின் ஆக்ஸிஜனற்ற ரைபோ கரு அமிலத்துடன் விட்டுச் செல்கிறது. இவ்வாறு செல்லையே மாற்றிவிடுகிறது. இதுவும் ஒரு வெறுப்பூட்டக்கூடிய படம். இவைகள் பாக்டீரியா விழுங்கிகள். நான் முன்பு கூறியவற்றை இங்கு நீ பார்க்கிறாய். இங்கிருப்பது பாக்டீரியா. இது அதனுடைய செல் சுவர். இது கொஞ்சம் கடினமாக இருக்கும் அதிலிருந்து வெளிவருவதும் கடினம். அல்லது சவ்வுகளுடன் சேர்ந்து ஒன்றாகவும் முடியாது. ஆகவே,அவை பாக்டீரியாவின் வெளிப்புறம் தொங்கிக்கொண்டிருக்கும். பின் அவை பாக்டீரியாவின் உட்புறம் நேரிடையாகவே தனது மரபுப்பொருளை உட்செலுத்துகிறது. மரபுப்பொருளை உட்செலுத்துகிறது. அவைகளின் உருவஅமைப்பை வைத்து இதை நீயே கற்பனை செய்து கொள்ளலாம். இதன் விளக்கம் என்னவென்றால் இது ஒரு செல். இங்கு இது ஒரு கோள் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. அல்லது இது பாக்டீரியா. இதனுடன் ஒப்பிடும்போது இவைகள் மிகச் சிறியவை. ஒவ்வொன்றும் பாக்டீரியாவில் 100ல் ஒரு பங்குதான் இருக்கும். செல்லில் நூறில் ஒரு பங்கு உள்ள விசயத்தைப் பற்றித்தான் இங்கு பேசுகிறோம். அவைகளை வடிகட்டி நீக்குவது என்பது மிகமிகக் கடினம். ஏனெனில் அவைகள் மிகமிகச் சிறியவை இவைகள் அயற்பண்புடைய பொருட்கள். எய்ட்ஸ்,எபோலா,நுரையீரல் அழற்சி நோய் போன்றவற்றை உருவாக்கவே வந்தவை என நீ நினைத்தால் அது சரியே. ஆனால்,இவைகள் பொதுவான விசயங்கள். எப்படியென்றால் எனக்குச் ஜலதோசம் உள்ளது என்று இந்தக் காணொளியின் ஆரம்பத்தில் கூறினேன். இதற்குக் காரணம் என்னுடைய நாசியின்யின் திசுக்கள் கிருமிகளால் தாக்கப்பட்டதால்தான் எனக்கு ஜலதோசம் பிடித்தது இதன் காரணமாக எனக்கு மூக்கு ஒழுகிக் கொண்டிருந்தது.இன்னும் சில தொந்தரவுகள். கிருமிகள் சின்னம்மையை உண்டாக்கும். ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ற அக்கி நோயை உண்டாக்கும். சளிகளை உண்டாக்கும். கிருமிகள் எப்பொழுதும் நம்மைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கின்றன. நீங்கள் பேசும்பொழுது கண்டிப்பாக கிருமிகள் வெளிவரும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அவை உன்னைச் சுற்றிலும் இருக்கின்றன. ஆனால்,இது உண்மையில் தத்துவரீதியான ஒரு குழப்பமான கேள்வி. ஏனெனில் நான் ஆரம்பத்தில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன்.இவைகளெல்லாம் உயிரினத்தைச் சேர்ந்தவைகளா? ஆரம்பத்தில் நான் உங்களிடம் இங்கே பாருங்கள்,இவை கருஅமில மூலக்கூறுகள் சேர்ந்த புரதங்கள் என்று கூறினேன். எந்தச் செயல்பாடுகளும் இன்றி இருந்தன. அதனால் அவைகளுக்கு உயிர் இருந்ததுபோல் தெரியவில்லை. இயக்கமும் இல்லை. வளர்சிதை மாற்றமும் இல்லை. உணவு எடுத்துக் கொள்வதில்லை. இனப்பெருக்கம் செய்வதில்லை. கிருமிகள் ஒரு உயிரணுவிற்கு என்னவெல்லாம் செய்கிறது.பின் அதை வைத்தே தன் பெருக்கத்தைச் செய்துகொள்கிறது என்ற விசயம் இப்பொழுது உனக்கு திடீரென்று ஞாபகத்திற்கு வரும் வணிக அடிப்படையில் கூறும்பொழுது இதன் முதலீடு குறைவு. இதன் செயல்முறை இதற்குத் தேவையில்லை. ஏனென்றால் இவை தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அடுத்தவர்களின் செயல்முறைகளை பயன்படுத்திக் கொள்கிறது. இவைகள் சாதுர்யமான வாழ்க்கை முறையைத்தான் வாழ்கின்றன மற்ற உயிரினங்கள் அவைகளின் வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்களை இவைகள் தங்கள் வாழ்வில் அனுபவிப்பதில்லை. வாழ்க்கை என்றால் என்ன?நாம் யார்? என்ற கேள்விகள் உன் மனத்தில் தோன்றலாம். நாம் இவைகளின் ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமலத்திற்காகவா அல்லது அவைகளின் இடமாற்றுக்காகவா? இவை மிகவும் முக்கியமான விசயங்கள். இந்தக் கிருமிகளின் தொற்று, பல வடிவங்களையுடைய ஆக்ஸிஜனற்ற ரைபோகரு அமிலம் , ரைபோகரு அமிலம் இவைகளுக்கிடையே உண்டாகும் போர் ஆகும். ஆனாலும் இதைப்பற்றிய தர்க்கத்திற்கு நான் வரவில்லை. இப்பொழுது கிருமிகள் என்றால் என்ன என்ற கருத்தை உனக்கு ஏற்படுத்தியிருக்கும். ஏன் அவைகள் இருக்கின்றன என்பதும் தெரிந்திருக்கும்.என்னைப் பொருத்தவரை அவைகள் உயிரியலில் உள்ள கவர்ச்சியான போலி உயிரினங்கள். \\ 7