என் உரையின் மூலம் ஓர் இலவச, தொழில்நுட்ப நுணுக்கங்கள் அற்ற, ஆனால், உங்கள் வாழ்வை மேரூகூட்டக்கூடிய ஓர் இரகசியத்தை தெரிவிக்க இருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களது தோற்ற அமைவை இரண்டு நிமிடங்களுக்கு மாற்றி அமைக்க வேண்டும். அந்த ரகசியத்தை தெரிவிப்பதற்கு முன், முதலில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். இப்பொழுது, உங்கள் தோற்றத்தையும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனையும் கண்காணியுங்கள். உங்களில் எத்தனை பேர் உங்களை சிறுமைப்படுத்தும் வகையில் உடல் தோற்றம் கொண்டுள்ளீர்கள்? கூனியவாரோ, கால்களை குருக்கிட்டவாரோ, கனுக்கால்களை பின்னியவாரோ அமர்ந்திருக்கலாம். சில சமயம் உங்கள் கைகளை இவ்வாறும் வைத்துக்கொண்டும் இருக்கலாம். சில சமயங்களில் நாம் கைகளை விரிக்கவும் செய்கிறோம். நான் உங்களை பார்த்து கொண்டிருக்கிறேன், (சிரிப்பு) எனவே, நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த சொல்கிறேன். கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் இதை பற்றி பேசுவோம். இன்னும் கொஞ்சம் நேரத்தில் உங்களது தோற்றத்தை மாற்றி அமைக்க நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். அந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் திறன் கொண்டது. உடல் தோற்றம் என்பது வியக்கவைக்கும் ஒரு அங்கமாக இருக்கிறது, நாம் முக்கியமாக ஆர்வம் கொண்டிருப்பது மற்றவரின் உடல் தோற்றத்தின்பால். நம் ஆர்வத்தை தூண்டுவது (சிரிப்பு) ஒரு சங்கடத்தை தரும் செயலெதிர்ச்செயல், ஒரு புன்னகை, இறுமாப்பான பார்வை, அல்லது ஒரு சங்கடம் தரும் கண் சிமிட்டல், ஒரு கைக்குலுக்கல் கூட. விவரனையாளர்: இவர்கள் பத்தாவது என்னை நெருங்குகிறார்கள். இதை பாருங்கள். அதிர்ஷ்டசாலி காவல்காரர் அமெரிக்க அதிபருடன் கைகுலுக்குகிறார். இதனை பாருங்கள். பிரதம மந்திரி? இல்லை. (சிரிப்பு ) (கைதட்டல்) (சிரிப்பு) (கைத்தட்டல்) எமி கடி: ஒரு கைகுலுக்கல், அல்லது ஒரு கைக்குலுக்கல் இன்மை, நம்மை இந்த நிகழ்வை பற்றி வாரங்களுக்குப் பேச செய்கிறது. பிபிசி மற்றும் தெ நியூ யோர்க் தைம்ஸ்-ஐயும் கூட. எனவே, நாம் மொழியற்ற நடத்தை பற்றியோ உடல் தோற்றத்தை பற்றியோ சிந்திக்கையில் -- மொழியற்ற நடத்தை என்று சமூக அறிவியலாளர்களை பின்தோற்றி கூறுகிறோம். -- அது ஒரு மொழி, எனவே, நாம் தொடர்புமுறைகளை பற்றி சிந்திக்கிறோம். தொடர்புமுறை என்றால், நாம் சிந்திப்பது செயலேதிர்செயலை. ஆகவே, உங்களது தோற்ற அமைவு எனக்கு எதனை புலப்படுத்துகிறது? என்னுடையது உங்களிடம் என்ன சொல்கிறது? உடல் தோற்றம் முக்கிய பங்குவகிக்கும் ஒரு கூறு என்று நம்புவதற்கு காரணங்கள் உண்டு. சமூக அறிவியலாளர்கள் நிறைய நேரம் செலவழித்துள்ளார்கள், மனிதர்களின் தோற்ற அமைவிற்கும் அதன் காரணமாக தீர்மானிக்கப்படும் கருத்துகளுக்கும் உள்ள தொடர்பை பற்றி அறிவதில். நாம் ஒருவரின் தோற்ற அமைவை கொண்டு அவரை பற்றிய கருத்துக்களை ஊகிக்கிறோம். அந்த கருத்துகள் அவரின் வாழ்வில் பல அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்துகின்றன. யாருக்கு நாம் வேலை தருகிறோம், யாரின்பால் நாம் ஈர்ப்பு கொள்கிறோம். உதாரணத்திற்கு, நளினி அம்பாடி, தப்த்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர். முப்பது வினாடிகள் மனிதர்கள் மருத்துவர்க்கும் நோயாளிக்கும் இடையிலான செயலேதிர்செயலை ஒளியற்ற காட்சிகளாக காணும்பொழுது மருத்துவரின் கணிவை பற்றி அவர்கள் கொள்ளும் கருத்து அந்த மருத்துவரின்பால் அவர்கள் வழக்கு தொடுப்பர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார். எனவே, மக்கள் மருத்துவரைப் பற்றி கொள்ளும் கருத்து அவரின் திறமையை சார்ந்தது அல்ல, அவரை மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதையும், அவர் மக்களுடன் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதனையும் சார்ந்துள்ளது. இதை விட வியத்தகு செய்தி, அலெக்ஸ் தொடொரோவ் ஒரு வினாடியில் மக்கள் கொள்ளும் அரசியல் வேட்பாளரின் முகம் சார்ந்த கருத்து எழுபது சதவிகித அமெரிக்க சட்டசபை மற்றும் ஆளுநர்களின் தேர்தல் வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கிறது என்பதுதான். என்மருவி உலகை பற்றி பார்ப்போம். இணைய பேச்சுவார்த்தைகளில் உணர்ச்சித்திரங்களைச் சரியாக பயன்படுத்தினால் அந்த பேச்சுவார்த்தையின் மதிப்பு கூடுகிறது. ஆனால், உணர்சித்திரங்களை தவறாய் பயன்படுத்துவது என்பது தவறான திட்டம். உண்மைதானே? ஆகவே, மொழியற்ற நடத்தை எனில், நாம் ஒருவர்பால் கொள்ளும் கருத்து எவ்வாறானது, மற்றவர்கள் நம்பால் எத்தகைய கருத்து கொண்டுள்ளனர் மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதை சிந்திக்க தூண்டுகிறது. நமது தோற்ற அமைவு மற்றவர்கள் மட்டுமின்றி நம்மையும் பாதிக்கும் என்பதை மறக்கிறோம். நமது நடத்தை நம் எண்ணங்களிலும், உணர்வுகளிலும், உடலியலிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எத்தகைய நடத்தையை பற்றி நான் இங்கு பேசுகிறேன்? நான் ஒரு சமூக உளவியலாளர். நான் தவறான எண்ணங்களை பற்றி ஆராய்கிறேன். ஒரு போட்டித்தன்மையுடைய வர்த்தக பள்ளியில் கற்பிக்கிறேன். எனவே, அதிகாரத்துவ இயக்கவியலில் நான் ஆர்வம் கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. குறிப்பாக நான் அதிகாரத்துவம் மற்றும் ஆதிக்கவியலின் மொழியற்ற வெளிபாடுகளில் ஆர்வம் கொண்டேன். அதிகாரத்துவம் மற்றும் ஆதிக்கவியலின் மொழியற்ற வெளிபாடுகள் என்றால் யாவை? இவைதான் அவை. விலங்குகள் அரசில், அவை அரசை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தும். நீங்களும் உங்களை பெரிதாக்குங்கள், உடலை விரியுங்கள், அதிக இடத்தை ஆகிரமியுங்கள். அடிப்படையில், நீங்கள் உங்களை திறக்கிறீர்கள். உங்கள் உடலை திறந்தவாறு அமைப்பதுதான், இரகசியமே. விலங்கியல் உலகில் இது முற்றிலும் உண்மை. வெறும் விலங்குகளுக்கு மட்டும் இது பொருந்துவது இல்லை. மனிதர்களும் இதையே செய்கிறார்கள். (சிரிப்பு) மனிதர்களும், விலங்குகளும் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் தருணங்களிலும், ஆதிக்க உணர்வுகொள்ளும்போதும் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். இது ஆதிக்கத்தின் உலகளாவிய தன்மையையும், பழைமையையும் தெளிவுறுத்துகிறது. பெருமிதம் என்று அடையாளப்படுத்துகிற இத்தகைய உணர்வின் வெளிப்பாட்டை ஜெசிக்கா த்திரேசி ஆராய்ந்துள்ளார். அவர் பார்க்கும் திறன் உற்றோர் மற்றும் பிறவி குருடர்கள் ஆகிய இரு சாராரும் உடல் திறனை அளவிடும் போட்டிகளில் வெற்றி பெரும்பொழுது இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறுகிறார். முடிவுக்கோட்டை அடைந்து வெற்றி என்பது உறுதியானவுடன், ஒருவர் முன்பின் மற்றொருவர் இவ்வாறு செய்வதை கண்டிருக்கிறாறோ இல்லையோ, இவ்வாறு செய்கிறார். கைகளை 'V' வடிவில் மேல் நோக்கியவாறு விரிக்கிறார். அவரின் தாட்டை சற்று உயர்த்தப்படுகிறது. நாம் வலுவின்றி இருக்கையில் என்ன செய்கிறோம்? இதற்கு எதிர்மாறாக செய்கிறோம். நம்மை நாம் மடித்துகொள்கிறோம். நம்மை நாம் சிறுதாக்குகிறோம். எனவே, மீண்டும் மனிதர்களும் விலங்குகளும் ஒரேவாறு செயல்படுகின்றனர். ஆதிகத்தன்மையையும் ஆதிகத்தன்மை இன்மையையும் ஒன்றாய் இணைக்கும்பொழுது இவ்வாறு நடக்கிறது. எனவே, ஆதிக்கதன்மையை பொறுத்தவரையில் நாம் இன்னொருவரின் மொழியற்ற நடத்தையை முழுமையடைய செய்கிறோம். ஒருவர் நம்மிடம் ஆதிக்கத்துடன் நடக்கையில் நாம் நம்மை சிறிதாக ஆக்கிகொள்கிறோம். நாம் அவரை போல் செய்வதில்லை. அவருக்கு எதிர்மாறாக செயல்படுகிறோம். நான் இந்த நடத்தையை என் வகுப்பறையில் கண்காணித்தபொழுது என்ன அறிந்தேன்? முதுகலை வணிக மேலாண்மை மாணவர்கள் முழுமையான மொழியற்ற நடைத்தையை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் அல்பாகளின் கேளிச்சித்திரங்களை போலிருப்பர், வகுப்பறைக்குள் வந்தவுடன், அதன் நடுவிற்கு செல்வர். வகுப்பு ஆரம்பிக்கும் முன்னே, தங்களிற்கான இடத்தை ஆகிரமிப்பர். அமருகையில், நன்றாய் இடத்தை நிரப்பியவாறு அமர்ந்திருப்பர். கைகளை தூக்குகையில், இவ்வாறு தூக்குவர். இதே நேரத்தில், மற்ற சிலர் கிட்டத்தட்ட வீழ்ச்சியடைந்த நிலையில் வகுப்பறைக்குள் நுழைவர். நுழையும்போதே நீங்கள் காண்பீர்கள். அவரது முகத்தில், உடலில், அவர்கள் உட்காரும் இடத்தில் நாற்காலியில் அவர்கள் தங்களை சிறிதாக ஆக்கியிருப்பர். கைகளை தூக்கும்பொழுது இவ்வாறு இருப்பர். இந்த நடத்தைகளை பற்றி நான் சில விஷயங்களை கவனித்துள்ளேன். ஒன்று, நீங்கள் அறிந்ததே, அவர்களின் பாலைப் பொருத்து இந்த நடத்தை அமைகிறது. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் இவ்வாறு அதிகமாக செய்கின்றனர். பெண்கள் ஆண்களைவிட தாங்கள் குறைவான ஆளுமைத்தனம் கொண்டவர்களாக நினைக்கின்றனர். எனவே, இது ஆச்சரியத்திற்க்கு உரியதல்ல. இத்தகைய நடத்தை அவர்கள் வகுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அளவினை பொருத்தும்,அந்த நடவடிக்கைகளில் அவர்களின் அடைவுநிலையை பொருத்தும் கூட அமைகிறது. எனவே இது முதுகலை வணிக மேலாண்மை வகுப்பறைகளில் மிகவும் முக்கியமாகிறது. ஏனெனில், மாணவர்களின் வகுப்பு பங்கேற்பு அவ்வகுப்பிற்கான பாதி மதிப்பெண்களை நிர்ணயிக்கிறது. எனவே, வர்த்தகப்பள்ளிகள் மாணவர்களுக்கிடையிலான இந்த பாலினம் சார்ந்த வேற்றுமையை களைய முயற்சிக்கின்றன. இங்கு சரிசம அளவில் தகுதிவாய்ந்த ஆண்களும் பெண்களும் கற்க வருகின்றனர். அவர்களது மதிப்பெண்களில் இத்தகைய வித்தியாசங்களை காண்கிறீர்கள்.. இந்த வித்தியாசம் அவர்களது வகுப்பு பங்கேற்பின் காரணமாக அமைகிறது. எனவே, என் எண்ணங்கள் உருவெடுத்தன, இத்தகைய நிலையை மாணவர்கள் ஆளுமைத்தனம் கொண்ட தோற்ற அமைவுகளை பாசாங்கு செய்வதின் மூலம் மாற்றமுடியுமா? இந்த மாற்றம் அவர்களின் வகுப்பு பங்கேற்பில் மாற்றம் ஏற்படுத்துமா? எனது முதன்மை கூட்டுபணியாளர் டானா கார்நி, பெர்கெலியில் இருக்கிறார். பாசாங்கு செய்வதன் மூலம் அனைத்தையும் மாற்ற முடியுமா என்பதை கண்டறிய விரும்பினேன். சிறிது நாள் பாசாங்கு செய்வது உண்மையில் உங்களை ஓர் ஆளுமைத்தனம் கொண்டவராய் மாற்றுமா? எனவே, நடத்தை என்பது நம்மை மற்றவர் எத்தகையவர் என நினைப்பதற்கு காரணமாகிறது. இந்த கருத்தை நிலைநிறுத்த நிறைய ஆதாரங்களும் உண்டு. ஆனால், நமது கேள்வி, நம் மொழியற்ற நடத்தை நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நிர்ணயிப்பதில் பங்காற்றுகிறதா? சில ஆதாரங்கள் அதனை புலப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, நாம் புன்னகைக்கும்பொழுது நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.. ஆனால், நாம் ஒரு பேனாவை பற்களுக்கு இடையே வைத்து, புன்னகைக்க வற்புறுத்தப்படுகிறபொழுதும், நாம் மகிழ்ச்சியடைகிறோம். எனவே, இரு வழியும் சாத்தியம். ஆளுமைத்தனமும் இரு வழியிலும் சாத்தியமாகும். நீங்கள் ஆதிக்க உணர்வு பெறும்பொழுது, நீங்கள் இவ்வாறு செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், பாசாங்கு செய்வதன் மூலம் ஆதிக்கத்தன்மை கொண்டவராய் வெளிப்படுவீர். நீங்கள் உண்மையிலேயே ஆளுமை உணர்வை அடைவீர்கள். எனவே, இரண்டாவது கேள்வி, எண்ணம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறபொழுது உடல், எண்ணங்களை மாற்றமுடியுமா? நான் ஆளுமை எண்ணம் என்று கூறுவது எதனை? சிந்தனைகளை, உணர்வுகளை, சிந்தனை மற்றும் எண்ணங்களை உருவாக்கும் உடலியல் கூறுகளைதான். இந்த பகுதியில், நான் வளரூக்கியை கண்காணிக்கிறேன் ஆளுமை உணர்வு கொண்டவர்களின் எண்ணங்களும் ஆளுமை உணர்வு அற்றவர்களின் எண்ணங்களும் ஒத்தவையா? ஆளுமை உணர்வு உடையவர்கள் உறுதி, நம்பிக்கை மற்றும் தெருள் நோக்குடையவராக இருக்கிறார்கள். உண்மையில் ஒரு விளையாட்டில் வெற்றிபெற்றுவிடுவோம் என்றே உணர்கிறார்கள். அருவமான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்கள் அதிகமான சவால்களை ஏற்கின்றனர். ஆதிக்க உணர்வு கொண்டவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. உடலியக்கவியல் அடிப்படையிலும் இரண்டு முக்கிய வளரூக்கிகள் உள்ளன: டெஸ்ட்டாஸ்ட்டுரோன், மேலாதிக்கயியல் கொண்டது, மற்றும் கார்டிசோல், மன அழுத்தத்திற்கான வளரூக்கி. நாம் கண்டறிந்தது என்னவென்றால் விலங்குகள் அடுக்கதிகாரத்தில் மேலாதிக்க உணர்வு கொண்ட அல்பா ஆண் விலங்குகள் அதிக டெஸ்டோஸ்டிரோனும் குறைந்த கார்டிசோலும் கொண்டுள்ளன. ஆளுமையும் திறனும் கொண்ட தலைவர்களும் அதிக டெஸ்டோஸ்டிரோனும் குறைந்த கார்டிசோலும் கொண்டுள்ளனர். இதன் பொருள் என்ன? நாம் ஆளுமை என்று சிந்திக்கும்போழுது, டெஸ்டோஸ்டிரோனைப் பற்றி மட்டுமே எண்ணுகிறோம். ஏனென்றால், டெஸ்டோஸ்டிரோன் ஆதிக்கத்துடன் இயைந்துள்ளது. ஆனால், உண்மையில், ஆளுமை என்பது ஒருவர் மன அழுத்தத்திற்கு எப்படி எதிர்செயலாற்றுகிறார் என்பதை பொருத்தது. எனவே உங்களுக்கு ஆளுமைத்தனம் கொண்ட, ஆதிக்கமுடைய ஒரு தலைவர், அதிக டெஸ்டோஸ்டிரோனுடன் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவராகவும் இருப்பவர் வேண்டுமா? இல்லைதானே? உங்களுக்கு ஆளுமை, உறுதி, ஆதிக்கம் கொண்ட, ஆனால், மன அழுத்தம் அடையாத ஒருவர்தானே வேண்டும். விலங்குகள் அடுக்கதிகாரத்தில், ஒரு அல்பா ஆட்சியை பிடிக்க வேண்டுமேன்றால், ஒருவர் உடனடியாக ஒரு அல்பாவின் பங்கினை ஆற்றவேண்டும் என்றால், சில நாட்களில், அவரின் டெஸ்டோஸ்டிரோனின் அளவு அதிகரித்து கார்டிசோளின் அளவு குறையும். நிரூபமானது என்னவென்றால், உடலால் எண்ணங்களை மாற்ற முடியும், முகத்தோற்ற மாற்றத்துடன், தன் பணியில் ஏற்படும் மாற்றம் எண்ணத்தையும் மாற்றும். நீங்கள், ஒரு மாற்றத்தை ஏற்பதாக இருப்பின், சிறிய அளவிலான இத்தகைய தக ஆளுகை, தலையீடு எந்த மாற்றத்தினை ஏற்படுத்தும்? இரு நிமிடங்களுக்கு, இப்படி நில்லுங்கள். இது உங்களை ஆளுமை உணர்வு உடையவராய் மாற்றும். இதனைத்தான் நாங்கள் செய்தோம். மனிதர்களை ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து, ஒரு ஆய்வு நடத்தினோம். இரு நிமிடங்களுக்கு, ஆளுமைத்தனம் கொண்ட தோரணையை அல்லது ஆளுமைத்தனம் கொண்டிராத தோரணையை செய்தனர். உங்களிடம் சில தோரணைகளை காட்டுகிறேன். ஒன்று. மேலும் பல. இது "வண்டர் வுமன்" கதாபாத்திரத்தை போன்றது என ஊடங்கங்கள் கூறின. மேலும் சில. எனவே, நீங்கள் நின்றவாரும், அமர்ந்தவாரும் இருக்கலாம். இவை ஆதிக்க உணர்வற்ற தோரணைகள். இதனில் நீங்கள் உடலை குறுக்கி, சிறிதாக ஆக்கியுள்ளீர்கள். இது மிகவும் ஆதிக்க உணர்வற்ற தோரணை. நீங்கள் உங்கள் கழுத்தை தொட்டவாறு இருக்கும்பொழுது உங்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். எனவே, இதுதான் நடக்கிறது. ஆராய்ச்சியில் பங்கேற்பவர்கள் வந்தவுடன் ஒரு குப்பியில் அவர்களது எச்சில் சேகரிக்கபட்டது. இரு நிமிடங்களுக்கு "இதனை செய்யுங்கள்" என்று சொன்னோம். அவர்கள் இந்த படங்களை பார்க்கவில்லை. எங்கள் எண்ணம் அவர்களுக்கு ஆதிக்க உணர்வை ஊட்டக்கூடாது என்பதுதான். அவர்களே அதனை உணர வேண்டும் அல்லவா? எனவே, இவ்வாறு இரண்டு நிமிடங்களுக்கு செய்கிறார்கள். பின்னர், சில பொருள்களை காட்டி "நீங்கள் எவ்வளவு ஆளுமையை உணர்கிறீர்கள்" என்று கேட்போம். அதன் பின், அவர்களுக்கு சூதாட வாய்ப்பளிப்போம். மீண்டும் அவர்களது எச்சிலை சேகரிப்போம். இதுதான் அந்த ஆய்வு. நாங்கள் கண்டறிந்தது. சாவல்களை சகிப்பது, அதாவது, சூதாடுவது, ஆளுமைத்தனம் கொண்ட தோரணைகளை செய்யும்பொழுது, எண்பத்தாறு சதவிகித மக்கள் சூதாடுகிறார்கள். ஆளுமைத்தனம் அற்ற தோரணைகளை செய்யும்பொழுது, அறுபது சதவிகித மக்கள் மட்டுமே சூதாடுகிறார்கள். இது பெரிய வேறுபாடு. டெஸ்டோஸ்டிரோனைப் பற்றி நாங்கள் கண்டறிந்தது, ஆளுமைத்தனம் கொண்ட தோரணைகளை செய்த மக்களின் டெஸ்டோஸ்டிரோன் , அவர்கள் ஆய்வுகூடத்திற்க்கு வந்தபொழுதைவிட இருபது சதவிகிதம் அதிகரித்தது. ஆளுமைத்தனம் அற்ற தோரணைகளை செய்த மக்களின் டெஸ்டோஸ்டிரோன் பத்து சதவிகிதம் குறைந்தது. எனவே, வெறும் இரண்டு நிமிடங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. கார்டிசோல் பற்றி இக்கருத்து. ஆளுமைத்தனம் கொண்ட மக்கள் இருபத்தைந்து சதவிகித குறைவை காண்கின்றனர். ஆளுமைத்தனம் அற்ற மக்கள் பதினைந்து சதவிகித அதிகரிப்பை காண்கின்றனர். இரண்டு நிமிடங்களில் இந்த வளரூக்கியில் வேறுபாடு ஏற்பட்டு மூளையை உறுதி, நம்பிக்கை மற்றும் சுற்றுசூழலை ஏற்கும்வாரும் அல்லது மன அழுத்ததிற்கு ஆளாகி முழுமையாய் தோல்வியுருபவராகவும் மாற்றுகிறது. எனவே, மொழியற்ற நடத்தை நமது சிந்தனையையும் உணர்வுகளையும் ஆளுகிறது. இது இன்னொருவரை மட்டும் பாதிப்பதில்லை. நம்மையும்தான். நமது உடல் எண்ணத்தை மாற்றுகிறது. அடுத்த கேள்வி என்னவேனில் ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகளை ஒரு சில நிமிடங்கள் செய்வது நமது வாழ்வை புரட்டி போடுமா? இது ஓர் ஆய்வுக்கூடம். இது ஒரு சிறிய பயிற்சி. ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான். நீங்கள் உண்மையில் இதனை எங்கு பயன்கொள்ள முடியும்? இதைதான் நாங்கள் கண்டறிய விரும்பினோம். முக்கியம் என்னவென்றால் நீங்கள் எத்தகைய மதிப்பீடக்கூடிய சூழல்களில் குறிப்பாக, சமூக அச்சுறுத்தல்கள் கொண்ட நேரங்களில் இதனை பயன்படுத்துவீர்களா என்பதே. எங்கு நீங்கள் உங்கள் நண்பர்களால் மதிப்பீடபடுகிறீர்கள்? பள்ளிமாணவர்கள் பள்ளி சிற்றுண்டிசாலையில் மதிப்பீடபடுவார்கள். சிலருக்கு பள்ளி ஆலோசக குழுவின் கூட்டங்களில் பேசுவதாக இருக்கும். ஒரு ஆலோசனையை முன்மொழிதலாக இருக்கலாம். ஒர் உரையாற்றுவதாக இருக்கலாம். அல்லது, ஒரு வேலைக்கான நேர்முகக்காணலாக இருக்கலாம். மக்கள் அதிகம் தொடர்புபடுத்தகூடியது, அவர்கள் அதிகம் எதிர்கொள்வது நேர்முகக்காணல்கள்தான். எனவே, நாங்கள் எங்களது ஆய்வு முடிவினை, ஊடங்கங்களில் பிரசுரித்தோம். நீங்கள் நேர்முகக்காணலுக்கு செல்லும்பொழுது இதை செய்வீர்களா? (சிரிப்பு) நாங்கள் பயந்தோம். நாங்கள் இவ்வாறு செய்யுங்கள் என்று சொல்லவில்லை. சில காரங்களுக்காக, தயவு செய்து அவ்வாறு செய்து விடாதீர்கள். இந்த மாற்றம் நீங்கள் மற்றவருடன் பேசுவதால் ஏற்படாது. நீங்கள் உங்களுடனே பேச வேண்டும். ஒரு நேர்முகக்காணலுக்கு செல்லும் முன் என்ன செய்வீர்கள்? இப்படித்தானே? ஆமாவா? நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் "ஐபோனை"யோ, அன்ரோய்ட்டையோ பார்த்து கொண்டிருப்பீர். உங்கள் குறிப்புகளைப் பார்த்து கொண்டிருகிறீர்கள், கூனி, உங்களை சிறிதாக்கி உள்ளீர்கள். உண்மையில் இதைத்தான் செய்ய வேண்டும். கழிவறையில் இரு நிமிடங்களுக்கு இவ்வாறு செய்யுங்கள். இதன் விளைவை நாங்கள் ஆய்வு செய்ய விரும்பினோம். சிலரை ஆய்வுகூடத்திற்க்கு அழைத்து ஆதிக்கதன்மை கொண்ட அல்லது கொண்டிராத தோரணைகளை செய்ய கூறினோம். பின்னர், ஒரு கடினமான அவர்கள் நேர்முகக்காணலை எதிர்க்கொண்டார்கள். அது ஐந்து நிமிடங்களுக்கு நீண்டது. அவர்களை ஒளிப்பதிவு செய்தோம். அவர்கள் மதிப்பீடப்படுகிறார்கள், மதிப்பீடுபவர்கள் மொழியற்ற நடத்தைகள் வெளிப்படுத்தாதிருக்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள். இப்படிதான் தோன்றுவார்கள். கற்பனை செய்யுங்கள். உங்களை இவர் நேர்முகக்காணல் செய்தால். ஐந்து நிமிடங்களுக்கு அவர் உங்களிடம் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தமாட்டார். மக்கள் இதனை வெறுப்பர். மேரியேன் லாப்ரன்ஸ் இதைத்தான் "சமூக புதைமணலில் நிற்பது" என்று கூறுவார். இந்த நிகழ்வு உங்கள் கார்டிசோலை அதிகரிக்கும். நேர்முகக்காணலில் என்னதான் நடக்கிறது என்பதை நாங்கள் அறிய விரும்பினோம். நேர்முகக்காணலின் ஒளிப்பதிவை நான்கு குறியீடாக்கிகளைப் பார்க்க செய்தோம். அவர்களுக்கு இந்த கருதுகோளைப் பற்றி எதுவும் தெரியாது. இந்த மாறிகளைப் பற்றியும் தெரியாது. எவர் எந்த தோரணையை செய்தவர் என்றும் தெரியாது. ஒளிப்பதிவை கண்டதும், "நாங்கள் இவர்களுக்கு வேலை தருவோம்" என சுட்டினார்கள். அனைவரும் ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகளை செய்தவர்கள். சிலருக்கு "நாங்கள் வேலை தர மாட்டோம்" என்றும் சுட்டினார்கள். ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகள் செய்தவர்களை ஆக்கமானவர்களாக மதிப்பீட்டனர். இதன் காரணம் யாது? நேர்முகக்காணல் பங்கேற்பாளர்களின் பேச்சு அல்ல. அவர்கள் வழங்கும் உளதாம்தன்மையே. நாங்களும் இவர்களை மதிப்பீட்டோம். திறன், வடிவமைக்கப்பட்ட பேச்சின் திறம், அவர்களின் தகுதிகள் ஆகிய அடிப்படைகளில். இந்த மாறிகள் எந்த மாற்றைத்தையும் ஏற்படுத்தவில்லை. மாற்றம் ஏற்படுத்தியது ஆளுமைதிறன் மட்டுமே. மக்கள் தங்களுடன் இந்த தகுதிகளை கொண்டுவருகிறார்கள். அடிப்படையில், அவர்களையே கொண்டுவருகிறார்கள். அவர்களின் திட்டங்களை, அவர்களாகவே, எந்த ஒரு பகுதியையும் எங்கும் விட்டுவிட்டு வரவில்லை. எனவே, இதுதான் விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, நான் மக்களிடம் கூறுவது, நமது உடல் நம் எண்ணங்களை மாற்றுகிறது, நமது எண்ணம் நமது நடத்தையை மாற்றும் என்பதும்தான். நமது நடத்தை பல நிகழ்வுகளின் வெளிப்பாடுகளை மாற்றும். மக்களோ, "இந்தே மாற்றங்கள், பொய்யானவை" என்று கூறுகிறார்கள். உண்மைதானே? எனவே, நடியுங்கள், இந்த நடிப்பே நீங்களாகும் வரை என்று நான் கூற, அவர்களோ இந்த மாற்றங்கள் நாங்கள் அல்லவே என்றனர். நான் நானாக இருக்க விரும்புகிறேன். பகடாக வாழ விரும்பவில்லை. நான் ஒர் ஏமாற்றுக்காரராய் உணர விரும்பவில்லை. இந்த மாற்றங்களால் வரும் வாழ்க்கையில், நான் இதற்கு தகுதியானவர் அல்ல என உணர விரும்பவில்லை. இந்த கருத்து என்னை உற்சாகம் செய்தது. ஒரு கதை சொல்கிறேன் எமாற்றுக்காரராய், நான் இங்கிருக்க தகுதி உடையவர் அல்ல என்ற உணர்வுகளை பற்றி. எனது பதின் ஒன்பதாம் வயதில், ஒரு மகிழுந்து விபத்தில் சிக்கினேன். காரிலிருந்து வெளியே தூக்கி எரியபட்டு, உருண்டேன். எழுந்து பார்த்தபோது, தலையில் பலத்த அடியுடன் புனர்வாழ்வு மருத்துவகூடத்தில் இருந்தேன். கல்லூரியிலிருந்து நிறுத்திவிட்டார்கள். எனது I.Q.-எனும் அறிவுத்திற அளவெண் இரண்டு திட்ட விலக்கம் குறைந்துவிட்டது. இந்த செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது. எனக்கு என் அறிவுத்திற அளவெண் தெரியும். அதற்கு காரணம், நான் அறிவாளி என அடையாளப்படுத்தப்பட்டவர். சிறு வயதிலேயே, நான் ஒரு பாக்கியசாலி. கல்லூரிக்குத் திரும்பி போக முயற்சித்தேன். அனைவரும், "நீ கல்லூரி படிப்பை முடிக்கமாட்டாய். நீ செய்வதற்கு மற்ற காரியங்கள் உண்டு, கல்லூரி உனக்கு பொருந்தாது" என்றனர்.. எனவே, நான் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது அடையாளம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. எனது அடையாளம் அறிவாளி என்பது. அது பறிக்கப்பட்டபொழுது, அதனை விட வலுவிழந்த நிலை வேறில்லை. ஆளுமைத்திறனின்றி, நான் உழைத்தேன். அதிர்ஷ்டவசமாய், எனக்கு வழி பிறந்தது. நான் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றேன். மற்றவர்களைவிட நான்கு வருடங்கள் அதிகமாக ஆயிற்று. எனது ஆலோசகர், சூசன் பிஸ்கேவை நம்பவைத்தேன், என்னை அவர் மாணவரை ஏற்க. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அப்பொழுது, நான் இங்கிருக்க தகுதி உடையவர் அல்ல. நான் எமாற்றுகிறேன் என தோன்றியது. மறுநாள் இரவு முதல் வருட மாணவர்களுக்கான உரை இருந்தது. இருபது நிமிட உரை இருபது பேரின் முன்னிலையில் ஆற்ற வேண்டும். அவ்வளவுதான். எனக்கு ஒரே பயம். நாளை, என்னை பற்றி அனைவரும் கண்டுபிடித்திடுவார்களோ என்று. எனது ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து, "நான் படிப்பை கைவிடுகிறேன்" என்றேன். அவரோ, "நீ இதனை கைவிடுவதில்லை, ஏனெனில் நான் உனக்கு ஒரு வாய்ப்பு தர முயற்சித்திருக்கிறேன், நீ இங்குதான் இருக்க போகிறாய். இங்கு இருந்து, படிக்கதான் போகிறாய். நீ பாசாங்கு செய். உன்னை உரையாற்ற கூறி வரும் ஒவ்வொரு முறையும் நீ உரையாற்றபோகிறாய். இதையே தொடர்ந்து செய்து கொண்டிரு, நீ பயந்தாலும், செயலிழந்தாலும், உன் உடலும் ஆத்மாவும் வெவ்வேறாய் தோன்றினாலும், தொடந்து செய், "நானே இதனை செய்கிறேன், நான் உரை ஆற்றுகிறேன். உரை ஆற்றுபவராய் மாறியிருக்கிறேன்." என்று நீ உணர்ந்து ஏற்கும் வரையில். அவர் கூறியவாறு செய்தேன். ஐந்து வருட முதுகலைக்கல்வி, சில வருடங்கள் நோர்த்வெஸ்தெர்ன் பல்கலைக்கழகத்தில், பின்னர், ஹார்வர்ட். உண்மையில் இப்பொழுது எனக்கு அத்தகைய எண்ணங்களே இல்லை. ஆனால், நெடுநாட்களுக்கு, "நான் இங்கு இருக்க கூடாது" என்று எண்ணி இருந்தேன். ஹார்வர்ட் முதல் ஆண்டு இறுதியின் பொழுது, வகுப்பில் ஒரு முறையும் பேசியிராத மாணவரிடம், "நீ வகுப்பில் பங்கேற்க வேண்டும். இல்லையேல், நீ தேர்ச்சி அடையமாட்டாய்" என்று சொல்லி இருந்தேன் . அந்த மாணவர் என் அலுவலுகத்திற்க்கு வந்தார். எனக்கு அவரை அவ்வளவாக தெரியாது. தோல்வியின் அடையாளமாய் அங்கு வந்த அந்த மாணவி, "நான் இங்கு இருக்க கூடாது" என்றார். அந்த தருணம் எனக்கே உரித்தானது. ஏனென்றால், இரண்டு நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று, நான் இப்பொழுதெல்லாம் அப்படி எண்ணுவதில்லை. ஆனால், அவர் எண்ணுகிறார். எனக்கு அந்த உணர்வு நன்கு புரிகிறது. இரண்டாவது, அவர் இங்கு இருக்க வேண்டியவர்! அவர் பாசாங்கு செய்ய வேண்டும், பாசாங்கு அவராய் ஆகும் வரை. எனவே "நீ இங்கு இருக்க வேண்டியவர்! நாளை நீ நடிக்க போகிறாய், உன்னை நீ வலுவாக்கபோகிறாய், நீ (கைத்தட்டல்) (கைத்தட்டல்) "வகுப்பறைக்கு போகிறாய், வகுப்பிலேயே சிறந்த கருத்தை நீ கூறபோகிறாய்." அதே போல், அவள்தான் மிக சிறந்த கருத்தை கூறினார். மற்ற மாணவர்கள் அவரை திரும்பி பார்த்து, இறைவா, அவர் வகுப்பில் இருக்கிறார் என்று நான் கவனித்ததில்லையே (சிரிப்பு) சில மாதங்குக்கு பின், அவர் மீண்டும் வந்தார். அப்பொழுது நான் உணர்ந்தேன் அவர் வெற்றி அடையும்வரை நடிக்கவில்லை, நடிப்பே தான என்கிறவரையில் நடித்துள்ளார். அவர் மாறியிருந்தார். எனவே, நான் உங்களுடன் சொல்ல விரும்புவது, வெற்றி அடையும்வரை நடிக்காதீர்கள். அதுவே நீங்களாய் ஆகும்வரை நடியுங்கள். நீங்கள் அந்த மாற்றத்தை உள்ளுணரும் வரை செய்யுங்கள். விடைபெறும் முன், கூற விரும்புவது இவை. சிறு மாற்றங்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இரண்டு நிமிடங்கள். இரண்டு நிமிடங்கள். அடுத்த கடினமான, உங்களை மதிப்பீடு செய்யும் சூழலுக்கு செல்லும் முன், இதனை செய்யுங்கள், இரண்டு நிமிடங்களுக்கு. மின்தூக்கியில், கழிப்பறையில், உங்கள் மேசையில், மூடிய கதவுகளுக்குப் பின். இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் மூளையை வடிவமையுங்கள், சூழலுடன் சிறப்பாய் ஒருங்கிணைய. உங்கள் டெஸ்டோஸ்டிரோனை அதிகரியுங்கள். உங்கள் கார்டிசோலை குறையுங்கள். அச்சூழலிருந்து, நீங்கள், தாங்கள் யாரென்று காட்டவில்லை என்ற வருத்தத்துடன் வெளியேராதீர்கள். வெளியேரும்பொழுது, உண்மையில் நீங்கள் யாரென்று சொல்ல, காட்ட வாய்ப்பு கிடைத்தது என உணருங்கள். எனவே, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். ஆதிக்க உணர்வை ஊட்டும் தோரணைகளை செய்து பாருங்கள். இன்னொன்று இந்த எளிதான அறிவியலை மற்றவருடன் பகிருங்கள். இந்த வேண்டுகோளில் எந்த ஒரு இறுமாப்பும் நான் கொண்டிருக்கவில்லை. மற்றவருடன் தாராளமாய்ப் பகிருங்கள். ஏனென்றால், அதிகம் பயன்பேறக்கூடிய மக்கள் எந்த வளமும், தொழில்நுட்பமும், தகுதியும், ஆளுமையும் கொண்டிருக்கமாட்டர்கள். அவர்களிடம் தாருங்கள். ஏனெனில், இதனை அவர்கள் தனிமையில் செய்ய இயலும். அவர்களுக்கு வேண்டியது உடல், தனிமை மற்றும் இரண்டு நிமிடங்கள். இந்த செய்தி அவர்களின் வாழ்வை மாற்ற இயலும். நன்றி. (கைத்தட்டல்) (கைத்தட்டல்)