இழையுருப்பிரிவின் நிலைகளைப் பற்றிக் கூறும்போது பொதுவாக இருமடிய உயிரணுக்களைப் பற்றித்தான் சொல்வார்கள். இருமடிய நிலை என்பதில் மரபுத்திரிகள் 2n எண்ணிக்கையில் உள்ளது. இது அணுவின் உட்கரு. இது ஒரு முழு செல்லின் படம். இதைப் பற்றி நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு செல் தன் நகலெடுத்தலில் இரண்டு மடிய செல்களை உண்டாக்குகிறது.அதன் ஒவ்வொன்றிலும் 2N எண்ணிக்கையில் மரபுத்திரிகள் உள்ளது. இழையுருப்பிரிவுகள் என்று கூறும்பொழுது சாதாரணமாக இதைத்தான் குறித்துச் சொல்கிறார்கள். இதில் ஒரு சிறிய தெளிவாக்கம் செய்ய விரும்புகிறேன். மரபணுப்பொருளுக்கும் உட்கருவிற்கும்தான் இழையுருபிரிவின் போது அதன் நகல் உண்டாகிறது. உதாரணமாக நான் இந்தச் செல்லை வரையும்போது அதில் 2 உட்கருக்கள் ஒவ்வொன்றும் இருமடிய மரபுத்திரிகளைக் கொண்டுள்ளது. இதில் இழையுருப்பிரிவு நடந்துள்ளது. உயிரணுச் சாறு இங்கு பிரியவில்லை.இதைப் பற்றிப் பின் கூறுகிறேன். ஆனால் இழையுருப்பிரிவில் இரண்டுவெவ்வேறு செல்கள் உயிரணுச்சாறுவுடன் உண்டாகிறது. இங்கு ஒன்றைத் தெளிவாக்குகிறேன். உயிரணுச் சாறு என்பது உட்கருவின் வெளியில் இருப்பது சிறிது சமயத்தில் இதைப் பற்றிக் கூறுகிறேன். அன்றாட வழக்கில் இழையுருப்பிரிவு பற்றிக் கூறும்பொழுது இவ்வாறுதான் இதைப்பற்றிச் சொல்வார்கள். இழையுருப்பிரிவு என்ன என்பதை உனக்கு ஒரு ஆசிரியர் இவ்வாறுதான் விளக்குவார். இழையுருப்பிரிவின் போது உட்கரு இரண்டாகப் பிரிகிறது அல்லது உட்கருவின் நகல் ஒன்று உருவாகிறது. அதைத் தொடர்ந்து உயிர்அணுச் சாறு பிரிகிறது. செல்லின் உயிரணுச் சாறுவும் பிரிகிறது. இழையுருப்பிரிவின் இயக்கவியல் பற்றி இனிப்பார்ப்போம். இழையுருப்பிரிவு நடப்பதற்குத் தேவையான முதல் படி, இழையுருப்பிரிவின் வெளியில்தான் நடக்கிறது.செல்கள் அதனதன் அன்றாட வேலைகளைச் செய்யும்போது அதாவது இடை நிலையின்போது. இடைநிலை என்பது இழையுருப் பிரிவைச் சேர்ந்தது கிடையாது. ஆனால் இதில் சில புதிய செல்கள் உண்டாகின்றன. இதற்கு பச்சை நிறம் கொடுக்கிறேன். இது ஒரு புதிய செல். இது அதன் உட்கரு. அதில் 2n எண்ணிக்கையில் மரபுத்திரிகள் உள்ளன.அவை வளர்ச்சி அடைகின்றன. சத்துக்களை வெளியில் இருந்து பெறுகிறது. புரதங்களை உண்டாக்குவதோடு வளர்ச்சியும் அடைகிறது. மரபுத்திரியின் வளர்ச்சி இங்கு நிறைவாகிறது. வாழ்க்கைச் சுழற்சியின் சில நிலைகளை இங்குக் குறிக்கிறேன்.இடைநிலையில் வரும் இந்த நிலையை உயிரியல் வகுப்பில்கூட இதைப் பற்றிக் கூறியிருக்க மாட்டார்கள் ஆனால்,இது இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இதை G1 என்று குறித்துள்ளார்கள். இது அதன் வளரும் பருவத்தைக் குறிக்கிறது. இது வளர்கிறது,பொருட்களை சேர்த்துகிறது,தன்னை உருவாக்கிக் கொண்டு மரபுத்திரிகளின் நகல் உண்டாக்குகிறது. இப்பொழுதும் இருமய எண்ணில்தான் மரபுத்திரிகள் உள்ளன. இதைக் கொஞ்சம் பெரிது பண்ணுகிறேன். இப்பொழுது இதை வரைகிறேன். இடைநிலையில் இது S நிலை. இதில் உண்மையான மரபுத்திரிகளின் நகல் எடுத்தல் நடைபெறுகிறது. நாம் இன்னும் இழையுருபிரிவிற்குச் செல்லவில்லை. ஆக S நிலையில் மரபுத்திரிகளின் நகலெடுத்தல் நடைபெறுகிறது. S நிலையில் உட்கருவை கொஞ்சம் பெரிதாக்கினால் இரண்டு மரபுத்திரிகளை மட்டும் கொண்டுள்ள உயிரினங்களில் இருந்து ஒருவேளை நான் ஆரம்பித்தால் நான் இங்கு என்ன சொல்லப் போகிறேனென்றால் S நிலையில் மரபுத்திரிகளின் நகல்கள் உண்டாகிறது.இதைப் படம் வரைந்து எவ்வாறு அவைகளின் நகல்கள் வருகிறது என்பதை விளக்குகிறேன். இங்கு ஒரு மரபுத்திரி உள்ளது. மேலும் இங்கு ஒரு மரபுத்திரி உள்ளது. S நிலையில் இந்த மரபுத்திரிகளின் நகல் உண்டாகிறது. இங்கு நான் உட்கருவை வரைந்துள்ளேன். இந்தப் பகுதியை நான் கொஞ்சம் பெரிதாக்கியுள்ளேன்.இங்குN ன் மதிப்பு 1. இருமடிய நிலையில் மரபுத்திரியின் எண்ணிக்கை 2. S நிலையில் மரபுத்திரியின் நகல் உண்டாகிறது. அப்பொழுது பச்சை நிறத்தில் இருக்கும் மரபுத்திரி ஒத்தவடிவமுள்ள இன்னொரு மரபுத்திரியை உண்டாகிறது. நாம் முன்பே இதைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துள்ளோம். இரண்டு மரபுத்திரிகளும் மத்தியில் இணைந்துள்ளன. கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மரபுத்திரியும் இப்படித்தான் செய்கிறது. ஒவ்வொரு மரபுத்திரிக்கும் ஒரு மரபுஇழை உள்ளது. இப்பொழுது நான்கு மரபு இழைகள் உள்ளன.ஒவ்வொரு மரபுத்திரியும் இரண்டு மரபு இழைகளாக இருந்தாலும் இரண்டு மரபுத்திரிகள் என்றுதான் கூறுகிறோம். இது மரபுத்திரியின் மையம். இது S நிலையில் உண்டாகிறது.அதற்குப்பின் செல் வளர்ச்சி தொடருகிறது. இப்பொழுது செல் கொஞ்சம் பெரியதாகிவிட்டது அதைப்பற்றிப் பார்ப்போம். செல் முன்பே பெரியதாக இருந்தது.இப்பொழுது மேலும் கொஞ்சம் பெரியதாகிவிட்டது. இது G நிலை.இந்த நிலையில் செல் மேலும் கொஞ்சம் பெரியதாகும். இப்பொழுது செல்லின் ஒரு சிறிய பகுதி இங்குள்ளது. இதைப்பற்றி இதுவரை நாம் எதுவும் இதைப்பற்றிப் பேசவில்லை. அதைப்பற்றிச் சிறிது கூறுகிறேன். இது மிக மிக முக்கியம் இல்லை. ஆனால் இதைத் துணைக்கரு என்பர். செல்பிரிவின்போது இவை மிக முக்கியமானவை .ஏனெனில் அப்பொழுது அவைகளின் நகல்களும் உண்டாகும். இங்கு துணைக்கரு உள்ளது. இதில் துணைக்கருமணி உள்ளது. அதைப்பற்றி அதிகம் கவலை கொள்ளவேண்டாம். உருளை வடிவத்தில் இருப்பவைகள்தான் அவைகள். நான் என்ன சொல்ல விரும்புகிறேனென்றால் துணைக்கரு, துணைக்கருமணி இந்த இரண்டின் பெயரையும் குழப்பிக்கொள்ளவேண்டாம். திரிமையம்,மரபு இழை இந்த இரண்டின் பெயருக்கும் குழப்பம் வேண்டாம். இதில் அந்த இரண்டு மரபுஇழைகள் இணையும் இடம்தான் நடுமையம். துரதிஷ்டவசமாக இந்தச் செயல்முறையில் இப்படித்தான் பெயர்கள் உள்ளன.செல்லின் பல பகுதிகளுக்குக் கூட இப்படித்தான் பெயர்கள் உள்ளன. இந்தத் துணைக்கருக்கள் வெகு விரைவில் நம் பகுதியில் வரப்போகிறது. இது உட்கருவின் வெளிபாகத்தில் உள்ளது.இதுவும் தன்னை நகலாக்கம் செய்யும். இடைநிலையிலும் அவைகளின் நகலாக்கம் நடக்கும். ஆகையால், முதலில் ஒன்று இருந்தது இப்பொழுது இரண்டாகிறது. அவைகளின் உள்ளே இரண்டு துணைக்கருமணிகள் உள்ளன. ஆனால், அவைகளைப் பற்றி இப்பொழுது அதிகம் கவனம் செலுத்தப்போவதில்லை. இதுதான் இடைநிலையில் உண்டாகிறது. இவ்வாறுதான் செல்களின் வாழ்க்கைச் சுழற்சி அமைகிறது. செல்கள் வளர்ச்சியடைந்து செய்ய வேண்டியவற்றைச் செய்கிறது நான் இங்கு ஒரு கருத்தைக் கூறவேண்டும். மரபணு இழைகளை வரையும்பொழுது அவைகளை நிறப்புரிகளாக வரைந்தேன். ஆனால், உண்மை என்னவென்றால் நாம் இடைநிலையில் இருக்கும்பொழுது மரபுநூலிழை இவ்வாறு தோற்றமளிக்காது. அதை நான் வரைந்தால் உண்மையில் மரபுக்கூறான குரோமேட்டின் வடிவத்தில்தான் இருக்கும். நான் வரைந்தது போல் மிக நெருக்கமாகச் சுற்றியிருக்காது. நான் இதில் நெருக்கமாகச் சுற்றியுள்ளது போல் வரைந்துள்ளேன். ஏனெனில் அதில் அவைகளின் நகல்களையும் பார்க்கமுடியும். ஆனால்,பச்சை வண்ணம் கொடுத்து வரையப்பட்டுள்ள நிறப்புரிகள் உண்மையில் சுற்றாமல் உள்ளது. அதை நுண்நோக்கியில் நீ பார்ப்பது கூடக் கடினம். இது மரபுக்கூறான குரோமேடின் தோற்றம். குரோமேடின் நிலையிலிருந்து மாறி எவ்வாறு நிறப்புரி ஆகிறது என்பதைப் பற்றிச் சிறிது பேசுவோம்.ஆனால்,அது குரோமேட்டின் நிலையில் மரபு இழைகளும் புரோதமும் சேர்ந்ததாக உள்ளது. மரபு இழைகள் கொஞ்சம் அதைச் சுற்றியுள்ளன. கொஞ்சம் புரதங்கள் உள்ளன.பின் மரபு இழைகள் அதனைச் சுற்றியுள்ளன. அதை நீ நுண்நோக்கியின் மூலம் பார்க்கும்பொழுது மரபுநூலிழையும் புரதமும் சேர்ந்து தெளிவற்றதாகத் தெரியும். கருஞ்சிவப்பில் உள்ள மூலக்கூறும் இதே போல்தான். மரபுநூலிழை சம்பந்தப்பட்டதில் இவ்வாறுதான் நடக்கும். குறிப்பேந்தி ஆர்.என்.ஏ மற்றும் அதற்கு உதவும் புரதங்களுடன் செயல்படுவதற்காக டி.என்.ஏ தன் சூழலில் திறந்தே இருக்கும். தன்னை நகல் எடுக்கும் இந்த வேலைக்காக சுருண்ட தன் உருவில் இருந்து நீளும். பிறகு மீண்டும் தன்னை நெருக்கமாகச் சுற்றிக் கொள்ளும். இதை இம்மாதிரி வரைந்துள்ளேன். இதில் பச்சைநிறத்தில் ஒன்று உள்ளது. இது அதேபோல் இன்னொரு பச்சை நிறத்தில் இன்னொன்றைப் பிரதியெடுக்கும். இரண்டும் ஒரு புள்ளியில் ஒட்டிக்கொண்டிருக்கும். கருஞ்சிவப்பில் இருப்பதும் தன்னை அதே கருஞ்சிவப்பில் நகலெடுத்து ஒரு புள்ளியில் இரண்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால்,அது தெளிவாக இல்லை. என்ன நடந்துள்ளது என்பதை இங்கு படம் போட்டுக் காட்டுகிறேன். இது உண்மை. இப்பொழுது மரபுக்கூறாக அதாவது குரோமேட்டின் ரூபத்தில் உள்ளது. இழையுருப்பிரிவு என்ற செயல்பாட்டின் கீழ் நடக்கும் உயிரணுப்பிரிவு பற்றிப் பார்ப்போம். இந்தச் செயல்பாட்டில் நடக்கும் முதல் நிலையை இங்கு வரைகிறேன். இந்தச் செல்லை பச்சை நிறத்தில் வரைகிறேன். செல்லினுள் இருக்கும் உட்கருவை எப்பொழுதும் செல்லினுள் இருக்கும் உருவத்தைவிட சற்று பெரிதாக இங்கு வரைகிறேன். ஏனெனில் உட்கருவிற்குள் நிறைய செயல்பாடுகள் நடக்கப்போகிறது. ப்ரோபேஸ் என்பது உயிரணுப்பிளவின் முதல்நிலை.(முன்னவத்தை) இந்தப் பெயர்கள் தன்னிச்சையான பெயர்கள். இந்த நிலையை நாம் நுண்ணோக்கியின் மூலம் பார்க்கமுடியும். இது ஒரு நிலை.செல் பிரிவில் இந்த முதல் நிலையை ப்ரோபேஸ் என்கிறோம். இந்த முதல் நிலையில் என்ன நடக்கிறது என்றால் இந்தக் குரோமேட்டின் நிறமிகள் இந்த ரூபத்தில் மாறுகிறது. இடைநிலையில் என்ன நடக்கிறது என்றால் மரபு நூலிழை பிரிந்து,நீண்டு மாறுகிறது. மீண்டும் அது தன்னைச் சுற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறது. இங்குதான் அது தன்னை முன்பே நகலெடுத்துள்ளது. செல்பிரிவுக்கு முன்பேஇந்த நகலெடுப்பு நடந்துள்ளது அதனால்தான் இங்கு ஒரு நிறப்புரி உள்ளது. இன்னொன்று இங்குள்ளது. ஒவ்வொன்றுக்கும் இரண்டு பிரதிகள் அரைநிறவுருக்கள் உள்ளன. அவைகள் தனித்தனியாக இழுத்துக் கொண்டுள்ளது. இந்த அரைநிறவுருக்கள்,மையப்படி என்னும் குறிப்பிட்ட இடத்தில் இணைந்திருக்கும்.இதைப் பற்றி செல்பிரிவின் முதல்நிலையில் கூறியுள்ளேன். இப்பொழுது இவைகள் அந்த நுண்குழலிகளுக்கு வேண்டிய வசதியைச் செய்து தருகிறது. செல் பிரிவின் போது அதனுள் உள்ளவைகளின் இயக்கத்திற்கு உதவுகிறது. இவையெல்லாம் மிகவும் வியப்பாக உள்ளது. நான் இங்கு என்ன கூறுகிறேனென்றால் நீ செல் என்று நினைக்கும் பொழுது இயல்பாகவே அவைகள் மிகவும் சாதாரணமானவை என்று நினைப்பாய்.ஆனால் அப்படி அல்ல. உயிரியலில் இது மிகவும் அடிப்படையான அமைப்பு. இதை முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சில சிக்கலான செயல்கள் உண்டு. இங்கு என்னுடைய கருத்து என்னவென்றால் அணு நிலையில் அல்லது புரதநிலையில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில் செயல்களை அழகாக இயக்கி வைக்கிறது. இப்பொழுதும்கூட இது ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. சிலவற்றை புரிந்து கொள்ளமுடிந்தது.சிலவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த இரண்டு துணைக்கருவும் நுண்குழாய்களின் வளர்ச்சிக்கு வசதி செய்கிறது. மிகவும் நுண்அமைப்புகளைக் கொண்டது நுண்குழாய்கள். ஒருவகையான கயிறு அல்லது குழாய் வடிவம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அணுப்பிளவின் முதல்நிலை முன்னேறும்பொழுது இறுதியில் அது ஒரு நிலையில் அதை இங்குச் செய்கிறேன். இங்கு நகல்எடுத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது குழப்பத்தை உண்டாக்கும். அதனால் இந்த வார்த்தையை அழிக்கிறேன். ஆகவே,இந்த வார்த்தையை விட்டுவிடுகிறேன். அணுப்பிளவின் முன் நிலையில் கருவின் உறை உண்மையில் மறைந்து விடுகிறது. இதை இங்கு வரைகிறேன். முதலில் நான் செய்ததை நகல் எடுத்து இங்கு ஒட்டுகிறேன். இதை இங்கு வைக்கிறேன். ஆகையால் முன் நிலை வளர்ச்சியடையும் பொழுது கருவின் உறை பிரியத்தொடங்குகிறது. இது கரைந்து பின் பிரிய ஆரம்பிக்கிறது. நிறப்புரிகள் வளர்ச்சியடைந்து மையனில் இணைந்து கொள்கிறது. இதை இங்கு வரைகிறேன். இது முன்நிலையின் போது நடக்கிறது. இவையெல்லாம் முன்அவத்தையில் நடக்கிறது. அதற்குப்பின் நடப்பவையெல்லாம் பின் அவத்தையில் நடக்கிறது. இதை முன் அனுவவத்தை என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தையின் இடையில் சிறிய கோடு வருகிறதா என்பது எனக்குச் சந்தேகமாக உள்ளது. இந்த நிலையை இழையுருப்பிரிவில் வேறொரு நிலை என்று கருதப்படுகிறது.நான் பள்ளியில் படிக்கும்பொழுது இதைப்பற்றி அதிக விளக்கம் யாரும் கொடுக்கவில்லை. உயிரணுப்பிளவின் முதல்நிலை என்றுதான் கூறப்பட்டது. முன்னவத்தையின் முடிவில் அல்லது முன் அனுவவத்தையின் முடிவில் இதில் நீ எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சூழ்நிலை இப்படித்தான் இருக்கும். முழுசெல்லும் இதுதான். கருவின் உறை பிரிந்துள்ளது. பிரிந்தது பிரிந்ததுதான். ஆனால் புரதங்கள் உண்டானது இன்னும் அதில்தான் உள்ளது. அவைகள் பின்பு பயன்படும். இதில் இரண்டு நிறப்புரிகள் உள்ளன. மனிதனைப் பொருத்தவரை 46 நிறப்புரிகள் இருக்கும். இந்த இரண்டு நிறப்புரிகளும் அதனதன் அரைநிறவுருக்களுடன் காணப்படுகின்றன. இரண்டு நிறப்புரிகள். இவைகளின் மையப்படி இங்குள்ளது. இப்பொழுது துணைக்கருக்கள் இரண்டும் தோராயமாக உட்கரு இருந்த இடத்திற்கு எதிர்புறமாக இடம் மாறுகிறது. பின் இவைகள் பிரிந்து செல்கிறது.இங்கு உண்மையில் நுண்குழாய்கள் இரண்டு வேலைகளைச் செய்கின்றன.. இந்த நிலையில் இரு துணைக்கருவும் தூர தள்ளப்படுகின்றன. இங்கு இவையெல்லாம் எதை இணைக்கிறது என்று பார்ப்போம். சில இந்தத்துணைக் கருவில் இருந்து வந்தவை. மேலும் சில, இந்தத்துணைக் கருவில்' இருந்து வந்தவை. பின் இந்த நுண்குழாய்கள் அல்லது கயிறுகள் போன்ற தோற்றமுடைய இந்தக் குழாய்கள் நிறப்புரியின் மையன்களுடன் இணைந்து கொள்கின்றன. அவற்றை மையத்துடன் இணைக்கும் புரத அமைப்பின் பெயர் கைனட்டோகோர் ஆகும். அது கைனட்டோகோராக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது புரோட்டின் அமைப்பு ஆகும். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த நுண்குழாய்கள் எவ்வாறு புரதஅமைப்புகளுடன் இணைந்துள்ளது என்பது இப்பொழுதும் கூட ஆராய்ச்சிக்குரிய விசயமாக உள்ளது. ஒரு வினாடியில் நாம் இதைப் பார்க்கப் போகிறோம். இந்த கைனட்டோகோரில் இணைந்துள்ள நுண்குழாய்கள் இப்பிரதிகள் அரைநிறவுருக்களை தனித்தனியாக தன்பால் இழுக்கிறது. உண்மையில் இந்தச் செயல்பாடு இதுவரை புரிபடவில்லை. ஆனால் இவ்வாறு நடப்பதை கண்டறியப்பட்டுள்ளது. அணுப்பிளவின் முதல்நிலை முடிந்ததும் நிறப்புரிகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளதை செல் தெளிவுபடுத்திக் கொள்கிறது. வரிசைப்படுத்தப்பட்டு அமைந்துள்ள நிறப்புரிகளை இங்கு வரைகிறேன். மையநிலையில் இது முறையாக நடைபெறுகிறது. முதல் நிலைக்கு அடுத்த நிலை மையநிலை.(அனுவவத்தை) முதல்நிலை முன்னவத்தை எனப்படும். நாம் இப்பொழுது இடை நிலையில் உள்ளோம். இந்த இடைநிலையில் நிறப்புரிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. எல்லா நிறப்புரிகளும் செல்லின் நடுவில் வரிசைப்படுத்தப்படுகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள அரைநிறவுரு இங்கொன்றுள்ளது .இங்கொன்றுள்ளது.பச்சைநிறத்தில் இருக்கும் நிறப்புரிகள் இங்குள்ளன. துணைக்கருவுகள்,அதிலிருந்து வரும் நுண்சுழல்கள் முதலியன இருக்கின்றன. கைனட்டோகோர் நுண்சுழல்கள் நிறப்புரிகளின் மையன்களில் இணைந்துள்ளது. இவைகள் உண்மையான நிறப்புரிகள். குழப்பமாக இருக்கிறது இல்லையா? துணைகருவுகள் என்ன செய்கிறது என்றால் நுண்குழாய்களில் நடப்பதற்கு வழிகாட்டியாய் உதவுகிறது. கலன் வடிவத்தில் இருக்கும் துணைக்கருமணிகள் துணைக் கருவிற்குள் உள்ளன. மையன்கள் என்பது நடுப்பகுதி. இதில் நிறப்புரியில் உள்ள மரபிழைகள் இரண்டும் இணைந்துள்ளன. இது ஒரு மரபிழை.இது இன்னொரு மரபிழை. இரண்டும் மையனில் இணைந்துள்ளது. இந்த நிலை அனுவவத்தை அல்லது இடைநிலை ஆகும். இது மிகவும் எளிதானது. இந்த நிலையில் செல்களின் சீரமைப்பு நடைபெறுகிறது. உண்மையில் இதுபற்றிய சில கொள்கைகள் இருக்கிறது. என்னவென்றால் இந்த நிலையில் இருந்து முன்னேறும் வழியை செல் எப்படித் தெரிந்து கொள்கிறது? ஒவ்வொன்றும் சீரான முறையில் அமைந்து ஒன்றுடனொன்று இணைந்துள்ளது என்பதை எப்படித் தெரிந்து கொள்கிறது? சில கோட்பாடுகள் என்ன சொல்கிறது என்றால் சில சமிக்ஞை பொறிமுறைகளைச் செல் பயன்படுத்துகிறது. இந்த சமிக்ஞையை வைத்து கைனட்டோகோர் புரதங்களில் ஒன்று அந்த கயிறு போன்ற நுண்குழாயில் இணையவில்லையென்றால் செல் பிரிவு தொடராது. ஆகையால் இந்த இடத்தில் இது ஒரு சிக்கலான செயல்முறையாகத் தோன்றுகிறது. இதை கற்பனை செய்துகொள்.உனக்கு 46 நிறப்புரிகள் உள்ளன. செல்லினுள் இதுவரை பார்த்த விசயங்கள் அவ்வளவும் நடந்துகொண்டுள்ளன. தனியொன்று இதனையெல்லாம் செய்யவைக்கவில்லை. அல்லது வேறு கணினி எதுவும் இதில் இல்லை. இவற்றையெல்லாம் வழி காட்டுவது வேதியலும் வெப்ப இயக்கவியலும்தான். ஆனால் இந்தச் செயல்கள் சிக்கலாகவும் இருக்கிறது அதே சமயத்தில் நேர்த்தியாகவும் உள்ளது. தன்னிச்சையாகவும் அதே சமயத்தில் சரிபார்ப்புடனும் சமநிலையுடனும் செயல்கள் நடத்தப்படுகின்றன.நிறைய நேரங்களில் தவறானதாக எதுவும் நடப்பதில்லை. இவையெல்லாம் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பகுப்புமையநிலையைத் தொடர்ந்து வருவது பிரிநிலை ஆகும். இதனுள் உள்ளவை இப்பொழுது பிரிவதற்குத் தயாராகிறது. பிரிநிலையில் நடப்பதை இங்கு எழுதுகிறேன். செல்லின் நிறத்தை மாற்றிவிட்டேன். இவைகள் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன இவைகள் இவ்வாறு பிரிக்கப்பட்டவுடன் ஒவ்வொன்றும் ஒரு திசையில் இழுக்கப்படுகிறது. இதை பச்சை வண்ணத்தில் செய்கிறேன். அரைநிற உருக்களி்ல்.இல்லை,இது பச்சைவண்ணத்தில் இல்லை. ஒன்று இந்தப் பக்கம் இழுக்கப்படுகிறது இன்னொன்று இந்தப் பக்கம் இழுக்கப்படுகிறது. கருஞ்சிவப்பில் இருப்பதற்கும் இதேபோல்தான் நடக்கிறது. ஒன்று இந்தப் பக்கம் இழுக்கப்படுகிறது. இன்னொன்று இந்தப்பக்கம் இழுக்கப்படுகிறது. துணைக்கருவுகள் இங்கே உள்ளன. அவைகள் இங்குள்ள கைனட்டோகோருடன் இணைந்துள்ளது. இவைகள்தான் அவற்றை இழுக்கின்றன. இந்த முழு நுண்குழாய்களும் உண்மையான நிறப்புரிகளுடன் சேர்ந்துள்ளன.s இவைகள் துணைக்கருவுகள் தனித்தனியே செல்ல உதவுகின்றன. அப்பொழுதுதான் ஒவ்வொன்றும் செல்லின் எதிர்திசையில் செல்லும். விரைவில் மரபிழைகள் இரண்டும் பிரிகிறது. டிஎன்ஏ சொல்லகராதி பற்றிக் கூறுவதற்குமுன் இதைப் பற்றி நான் கொஞ்சம் பேசியுள்ளேன். இவை ஒவ்வொன்றும் நிறப்புரிகள் அல்லது குரோமோசோம்கள். ஒரு செல்லினுள் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அவையெல்லாம் இதில் வந்துவிட்டது என இப்பொழுது நீ கூறலாம். இதில் இரண்டு நிறப்புரிகள் உள்ளன. ஆனால்,இப்பொழுது இதில் நான்கு நிறப்புரிகள் உள்ளன. ஏனெனில் மரபு இழைகள் அரைநிறவுருக்களுடன் சேராமல் இருக்கும் பொழுது அதுவும் அரைநிறவுருக்களாகிறது. வழக்கத்தில் அதை ஆங்கிலத்தில் சிஸ்டர் குரோமோசோம்கள் என்பார்கள். நான் இங்கு என்ன சொல்கிறேன் என்றால் இவைகள் முன்பும் இருந்தது.இப்பொழுதும் இருக்கின்றது. முன்பு இணைந்திருந்தது. இப்பொழுது இணைந்திருக்கவில்லை. அவைகளின் தனிப்பட்ட செயல்களாக நீ இதை எடுத்துக் கொள்ளலாம். இதுவரை நாம் முடித்துவிட்டோம். இதில் கடைசி நிலை ஈற்றவத்தை ஆகும். செல்லை இப்பொழுது கொஞ்சம் வித்தியாசமாக Vவரைகிறேன்.ஏனெனில் ஒரே சமயத்தில் சில விசயங்கள் இந்த ஈற்றவத்தையில் நடக்கும். ஈற்றவத்தையில் கலத்தை நான் இப்பொழுது 90 டிகிரி கோணத்தில் சுழற்றி வைக்கிறேன். இப்பொழுது இது ஒரு மையப்படி. இது இன்னொரு மையப்படி. முக்கியமாக இந்த இடத்தில்தான் மரபணுக்கள் இழுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒரு நிறப்புரியின் நகலை இது இங்கு இழுத்துக்கொள்கிறது. இன்னொரு நிறப்புரியின் நகலை இதன் பக்கம் இழுத்துக் கொள்கிறது. இதுவும் இப்படித்தான் செய்கிறது. ஒவ்வொன்றின் நகலில் இருந்தும் ஒன்றை எடுத்துக் கொள்கிறது. நிறப்புரியின் ஒரு நகலை எடுத்துக் கொள்கிறது. இதை இப்படி வரைகிறேன். இரண்டின் முடிவிலும் செல் உறைகள் உண்டாக ஆரம்பிக்கின்றன. இப்பொழுது இரண்டைச் சுற்றிலும் கருவின் மென்படலம் உண்டாகிறது. ஆகையால் ஈற்றவத்தையின் முடிவில் இழையுருப்பிரிவு முடிந்துவிடுகிறது. அசல் கருவின் இரு நகல்கள் மரபணுக்களுடன் உள்ளடங்கியுள்ளது ஈற்றவத்தை நடக்கும்பொழுதே குழியவுருப்பிரிவும் நடைபெறுகிறது. குழியவுருப் பிரிவின்போது சிறிய பிளவு உண்டாகிறது. ஈற்றவத்தையின் போது அவைகள் நுண்குழாய்களால் மேலும் கொஞ்சம் தள்ளப்படுகின்றன. இதில் செல்கூழ்மம் உள்ளது. இவையெல்லாம் ஒரு பக்கமாக தள்ளப்படுவதால் செல்லை நீ பார்க்கும்போது கொஞ்சம் நீளமான வடிவத்தில் தெரியும். இப்பொழுது இந்தப் பிளவு உண்டாகி உள்தள்ளப்பட்டது போன்ற வடிவத்தில் இருக்கிறது. இழையுருப் பிரிவின் ஈற்றவத்தையில் இந்தக் குழியுருப் பிரிவின் செயல்பாடு நடக்கிறது. இந்தக் குழியவுருப் பிரிவில் அந்தப் பிளவு அதிகமாகி அதிகமாகி செல்கூழ்மம் இரண்டாகப் பிரிந்து இரு அணுக்கள் உண்டாகின்றன. இந்தக் குழியவுருப் பிரிவு என்பது இழையுருப் பிரிவில் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும் ஈற்றவத்தையில் அந்தச் செயல்பாடு முறையாக நடக்கிறது. ஆக,இழையுருப்பிரிவின் முடிவில் இரண்டு ஒரே மாதிரியான செல்கள் உண்டாகின்றன. ஒருமுறை இவ்வாறு இரண்டு செல்களும் உண்டானவுடன் ஒவ்வொன்றும் தனித்தனியாக இடையவத்தைக்குச் செல்கிறது. ஒவ்வொன்றும் தனியாக ,இதை நாம் எடுத்துக் கொண்டால் இது அதன் G1 நிலையில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் இவை இரண்டும் தங்கள் பிரதியை உண்டாக்கப் போகிறது. இது S நிலை. நீ G2 நிலைக்குச் செல்லும்பொழுது மீண்டும் இது ஒரு இழையுருப் பிரிவிற்கு உள்ளாகும்.