மீப்பெரு பொது வகுத்தி அல்லது
மீப்பெரு பொதுக் காரணி காணொளிக்கு உங்களை வரவேற்கிறோம்
முதலாவதாக, யாரேனும் ஒருவர் உங்களைக
பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொது வகுத்தி என்ன?
அல்லது பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி என்ன என அவர்கள் உங்களைக் கேட்டால்?
பொது என்பதிற்கு இங்கு பொ. என்று குறிப்பிடப்பட்டுள்ளது
அது ஏன் அதைப்போன்று வந்தது என்பது எனக்குத் தெரியாது.
அவர்கள் உங்களிடம் அதையே கேட்கிறார்கள்.
அதாவது, உண்மையில் ஒரு வகுத்தி என்பது ஏதேனும் எண்ணை வகுக்கக்கூடிய ஒரு எண் ஆகும்,
மற்றும் ஒரு காரணி -- அதுவும் ஒன்றை வகுக்கக்கூடிய ஒரு எண் ஆகும்.
எனவே ஒரு வகுத்தி மற்றும் ஒரு காரணி என்பது ஒரே மாதிரியானவை.
எனவே இந்த வழியில், நாம் கண்டுபிடிப்போம்.
மீப்பெரு பொது வகுத்தி என்றால் என்ன
அல்லது பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி என்ன?
நாம் செய்ய வேண்டியது மிகவும் எளிதானது.
முதலில், ஒவ்வொறு எண்ணின் காரணிகளையும் நாம் கண்டுபிடிப்போம்.
முதலில், பன்னிரண்டின் அனைத்துக் காரணிகளையும் நாம் எழுதலாம்.
ஒன்று ஒரு காரணி. பன்னிரண்டு இரண்டால் வகுபடும்.
பன்னிரண்டு மூன்றால் வகுபடும்.
பன்னிரண்டு நான்கால் வகுபடுm.
பன்னிரண்டு ஐந்தால் வகுபடாது.
பன்னிரண்டு ஆறால் வகுபடுகின்றது, ஏனெனில் அது இரண்டு பெருக்கல் ஆறு.
பின்னர், நிச்சயமாக பன்னிரண்டு பன்னிரண்டால் வகுபடும்.
ஒன்று பெருக்கல் பன்னிரண்டு.
எனவே, இவை அனைத்தும் பன்னிரண்டின் காரணிகள்.
எட்டின் காரணிகளை நாம் எழுதலாம்.
எட்டு ஒன்றால் வகுபடும்.
எட்டு இரண்டால் வகுபடும்.
எட்டு மூன்றால் வகுபடாது.
எட்டு நான்கால் வகுபடும்.
பிறகு ஒன்றுடன் சேர்ந்து கடைசியாக எட்டு வரும்
எனவே, நாம் பன்னிரண்டு மற்றும் எட்டின் அனைத்துக் காரணிகளையும் எழுதியுள்ளோம்.
இப்பொழுது, பன்னிரண்டு மற்றும் எட்டின் பொதுவான காரணிகளை கண்டு பிடிக்க வேண்டும்
அவை இரண்டிற்கும் ஒன்று பொதுவான காரணியாக உள்ளது.
அது அவ்வளவு சிறப்பானது அல்ல.
ஒவ்வொரு முழு எண்ணும்
அல்லது ஒவ்வொரு முழுவும் ஒன்றை பொதுவான காரணியாகப் பெற்றுள்ளன.
அவை இரண்டிற்கும் இரண்டு பொதுக் காரணியாக உள்ளது.
மேலும், அவை இரண்டிற்கும் நான்கு பொதுக் காரணியாக உள்ளது.
பொதுக் காரணிகளை கண்டுபிடிப்பது மட்டுமே நமக்கு முக்கியமானது அல்ல.
மீப்பெரு பொதுக் காரணியைக் கண்டுபிடிப்பதில் தான் நாம் ஆர்வமாக இருக்கிறோம்.
எனவே, ஒன்று, இரண்டு, மற்றும் நான்கு ஆகிய அனைத்தும் பொதுக் காரணிகள் தான்.
அவற்றில் மிகப்பெரியது எது?
அது மிகவும் சுலபமானது.
அது தான் நான்கு.
எனவே, பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும்.
அதை அழுத்திக் கூறுவதற்காக நான் கீழே எழுதுகிறேன்.
பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும்.
நிச்சயமாக, சொன்னது போலவே நாம் எளிதாக கண்டறிந்து விட்டோம்,
பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும்.
சில சமயங்களில், இது வேடிக்கையாகிவிடுகின்றது.
நாம் வேறொரு கணக்கைச் செய்வோம்.
இருபத்தைந்து மற்றும் இருபது ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி என்ன?
நன்று, நாம் இதையும் அதைப் போன்றே கண்டுபிடிப்போம்.
இருபத்தைந்தின் காரணிகள் யாவை?
ஒன்று ஒரு காரணி.
இரண்டால் அது வகுபடாது.
மூன்றால் அது வகுபடாது.
நான்கால் அது வகுபடாது.
ஐந்தால் அது வகுபடும்.
அது, ஐந்து பெருக்கல் ஐந்து ஆகும்.
அதன் பின்பு இருபத்து-ஐந்து.
இது மூன்று காரணிகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது வியப்புக்குரியதாகும்.
இந்த எண்ணுக்கு ஏன் மூன்று காரணிகள் மட்டுமே இருக்கின்றன
மேலும் மற்ற எண்களுக்கு இரட்டைப்படை காரணிகள் உள்ளன என்பதை உங்களுடைய சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.
அதன் பின் இப்பொழுது நாம் இருபதின் காரணிகளைக் கண்டுபிடிப்போம்.
இருபதின் காரணிகள் ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, பத்து மற்றும் இருபது.
இதை ஒரு மேர்ப்பார்வையிட்டால், அவை இரண்டிற்கும் ஒன்று என்பது
பொதுக் காரணியாக இருக்கும், ஆனால் அதில் அவ்வளவு சிறப்பு இல்லை.
அவை இரண்டுக்கும் பொதுக் காரணி இருக்கின்றதா?
நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் -- ஐந்து.
எனவே இருபத்தைந்து மற்றும் இருபது ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி அல்லது காரணி
ஐந்து ஆகும்.
நாம் வேறொரு கணக்கைச் செய்யலாம்.
ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொதுக் காரணி என்ன?
ஐந்தின் பொதுக் காரணிகள்?
மிகவும் எளிமையானது.
ஒன்று மற்றும் ஐந்து.
ஏனெனில் அது ஒரு பகா எண்.
ஒன்றையும் அந்த எண்ணையும் தவிர அதற்கு வேறு காரணிகள் கிடையாது.
பன்னிரண்டின் காரணிகள் யாவை?
பன்னிரண்டிற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன.
அவை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியன.
எனவே, ஒன்று மட்டும் தான் அவைகளுக்கு இடையே இருக்கும் பொதுவான காரணி.
எனவே, இது சற்று ஏமாற்றமளிப்பதாக உள்ளது
ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொதுக் காரணி ஒன்று.
உங்களுக்காக இங்கே சில கலைச்சொற்களை நான் வழங்குகின்றேன்.
இரண்டு எண்கள் 1-ஐ மட்டுமே பொதுவான காரணியாகக் கொண்டிருந்தால்,
அவை சார்பகா எண்கள் எனப்படுகின்றன.
இது பொருளுடையதாக இருக்கின்றது, ஏனெனில் பகா எண் என்பது
ஒன்றையும் தன்னையும் மட்டுமே காரணியாகக் கொண்டுள்ள ஒரு எண் ஆகும்.
மேலும் இரண்டு சார்பகா எண்கள்
என்பவை ஒன்றை மட்டுமே தங்களுடைய மீப்பெரு பொதுக் காரணியாகப் பெற்றுள்ள எண்கள் ஆகும்.
நான் உங்களைக் குழப்பவில்லை என நினைக்கிறேன்.
நாம் மற்றொரு கணக்கைச் செய்வோம்.
ஆறு மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியைக் கண்டறிவோம்.
பன்னிரண்டு பலமுறை வருகின்றது என்பது எனக்குத் தெரியும்.
என்னுடைய எண்களை மிகவும் புதுமையான முறையில் நான் முயற்சி செய்கிறேன்.
ஆறு மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி என்ன?
ஆறின் காரணிகள்
ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஆறு.
பன்னிரண்டின் காரணிகள்: ஒன்று, இரண்டு, மூன்று --
இப்பொழுது நாம் கிட்டத்தட்ட இவற்றை மனப்பாடம் செய்திருக்க வேண்டும்.
மூன்று, நான்கு, ஆறு மற்றும் பன்னிரண்டு.
நல்லது, ஒன்று என்பது இவை இரண்டின் பொதுவான காரணி என்பது தெரிகின்றது.
இரண்டும் இவற்றின் பொதுக் காரணி தான்.
மூன்றும் ஒரு பொதுக் காரணி தான்.
ஆறும் இவற்றின் ஒரு பொதுக்காரணி தான்.
இதில், மீப்பெரு பொதுக் காரணி என்ன?
அது, ஆறு தான்.
இது சுவாரஸ்யமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் மீப்பெரு பொது வகுத்தி --
மேலும், வகுத்திக்கும் காரணிக்கும் இடையே மாறுவதற்கு என்னை மன்னிக்கவும்.
கணித சமுதாயம் இவற்றில் ஏதேனும் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆறு மற்றும் பன்னிரண்டின் மீப்பெரு பொது வகுத்தி என்பது ஆறு.
உண்மையில் இது, அந்த எண்களில் ஒரு எண்ணிற்கு சமம்.
இது மிகவும் பொருளுள்ளதாக இருக்கின்றது
ஏனெனில் பன்னிரண்டு ஆறால் வகுபடும்.
அவ்வளவுதான்.
நீங்கள் இப்பொழுது மீப்பெரு பொது வகுத்தி
காரணி கணக்க்குகளைச் செய்வதற்கு நம்பிக்கையுடன் தயாராக இருக்கிறீர்கள்.
கூடிய விரைவிலேயே மற்றொரு தொகுதியை நான் தயாரிக்கிறேன்.
அது உங்களுக்கு மேலும் பல எடுத்துக்காட்டுக் கணக்குகளைக் கொடுக்கும்.