இளவரசர் பிரான்சு பெர்டினண்டு படுகொலை முதல் உலகப்போருக்குத் துாண்டுதலாக இருந்த மிகப் பிரபலமான நிகழ்வை இங்கு அறிந்து கொள்ளலாம் மிகப்பெரிய போரென அறியப்படுகின்றதன் ஒரு சிறிய பின்னணி தான் இக்காணொளி 1908 ம் ஆண்டு ஆஸ்திரியா - ஹங்கேரி அரசு பொசுனியா எர்செகோவினாவை முறையாக தன்னுடன் இணைத்துக் கொண்டது. 1800 களின் பின் பகுதியிலிருந்தே இந்நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது ஒட்டோமோன்கள் வெளியேற்றப்பட்டதால் 1908 ம் ஆண்டு முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டன இதன் பின்னணியானது ஓட்டோமோன்கள் பால்கின்ஸிலிருந்து வெளியேற்றப்படுவதால் யுகோசுலோவியா மக்களை தெற்கு ஸ்லோவியாவாக ஒருங்கிணைக்கும் நம்பிக்கைப் பெற்றது மக்கள் யுகொசலோவ் என்பதை தெற்கு ஸலோவியர்களையே குறித்தனர் அவர்களை மட்டுமே குறித்து வந்தனர் அவர்களிடம் அத்தகைய நாட்டுப் பற்று மிகுந்திருந்தது. ஆயினும் 1908 ல் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட முக்கியத்துவமான மாகாணம் தற்போது முறையாக பிற்காலத்திய யுகோஸ்லோவிற்கு ஆஸ்திரோ அங்கேரிய அரசுடன் இணைக்கப்பட்டது. சுதந்திர தேசமான செர்பியா தேசியவாத அமைப்புக்கு அடித்தளமாக இருந்தது. மேலும் மீதமுள்ள தெற்கு ஸ்லோவிக் மாகாணங்களை இணைப்பதால் தான் யுகோஸ்லோவியா பேரரசு ஆகும் என்ற அடிப்படையில் இவ்வமைப்புகள் ஈடுபட்டிருந்தன. உலக வரலாற்றில் மிக முக்கிய நாளான 1914 ஜீன் 28 ல் பிரான்சு பெர்டினண்டு மற்றும் அவரது மனைவி சோபியாவும் போசானியாவோடு இணைக்கப்பட்ட சாரஜேவோக்கு வருகைப் புரிந்தனர் அவர்களை அங்கு கொள்வதற்க்காக இளம் போசுனியா எனப் பொருள்படும் இம்லாடா போசுனியா என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கம் பிளாக் HAND உடன் திட்டம் தீட்டியிருந்தது. தேசியவாதிகளான BLACK HAND செர்பிய இராணுவத்தின் ஒரு இரகசிய அமைப்பு இத்தேசியவாதிகளே பிரான்சு பெர்டினண்டை கொலை செய்ய எத்தனித்தவர்கள் இது உண்மையில் ஒரு சுவாரசியமான கதை ஏனெனில் இளவரசர் பிரான்சு பெர்டினண்டு கொலை செய்வதற்காக ஆரம்ப முயற்சி தோல்வியடைந்தது தான் பிடிபடாதிருக்க காப்ரினோவிச் சயனைடு குப்பியை விழுங்கியதோடன்றி மில்யாக்கா ஆற்றில் குதித்தார். ஆனால் சயனைடு நாள்ப்பட்டிருந்ததாலும் ஆற்றின் ஆழம் 10 centimetres (4 in) மட்டுமே இருந்ததாலும் அவர் காவல்துறையால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார். காவ்ரீலோ பிரின்சிப் (Gavrilo Princip) முயற்சிகள் தோல்வியடைந்தவுடன் சற்று கொலை முயற்சியை நிறுத்தினார் பிரின்சிப் பிரான்சு பெர்டினண்டின் தானுந்து தவறான திருப்பத்தில் தன்னைக் கடந்து செல்வதை மோரிட்சு சில்லரின் உணவகத்தருகே கண்டார். தன் தவறை உணர்ந்த ஓட்டுநர் தானுந்தை பின்திசையில் செலுத்த முயன்றார். இச்சமயத்தில் தானுந்துப் பொறி நின்றதுடன் பற்சக்கரங்களும் சிக்கிக் கொண்டன. இது பிரின்சிப்பிற்கு வாய்ப்பு தந்தது. முன்னேறிய பிரின்சிப் தனது கைத்துப்பாக்கியை உருவி , இடையில் வந்த பாதசாரியை கைத்துப்பாக்கியாலேயே விலக்கி,கிட்டத்தட்ட 1.5 மீ (ஐந்து அடி) தொலைவிலிருந்து தானுந்தினுள் இருமுறை சுட்டார். பிரான்சு பெர்டினண்டுக்கு கழுத்திலும் சோபியாவிற்கு (முதல் சுடுதலை அடுத்து உள்ளுணர்வால் பெர்டினண்டை தனது உடலால் மறைத்ததால்) வயிற்றிலும் துப்பாக்கி இரவை பாய்ந்தது. இருவரும் 11:00 மணிக்கு முன்னரே இறந்தனர். இந்நிகழ்வின் முக்கியத்துவத்திற்கான காரணம் பிரான்சு பெர்டினண்டு ஆஸ்திரிய நாட்டு வாரிசு பிரான்சு பெர்டினண்டு ஆஸ்திரிய அங்கேரிய நாட்டின் ஆளுநர் பிரான்சு ஜோசப் அண்ணன் மகன் ஆக பிரான்சு பெர்டினண்டு தான் அந்நாட்டின் வாரிசு அதனாலேயே கொல்லப்பட்டார் இப்படத்தில் காணப்படுபவரே காவ்ரீலோ கொலைக்கு பின் கைது செய்யப்பட்டார் குற்ற விசாரணையின்போது பிரின்செப் "நான் யூகோசுலாவிய தேசியவாதி, யூகோசுலாவியர்களை ஒருங்கிணைத்தலே என் நோக்கம்; எந்தவிதமான அரசாக அமைந்தாலும் எனக்குக் கவலையில்லை, ஆனால் ஆத்திரியாவிலிருந்து விடுதலை பெற வேண்டும்" என்று முழக்கமிட்டார். இதன் மூலம் தேசியவாத அமைப்பின் நோக்கம் அறியப்படுகிறது. இதன் நோக்கம் பொசனியா மற்றும் அர்செகோவினாவை செர்பியவுடன் இணைப்பது. இச்சதியில் பல செர்பிய இராணுவ அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டு ஆஸ்திரிய-அங்கேரி இராச்சியம் சூலை இறுதி எச்சரிக்கை எனப்படும் எதிர்ப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்தே முதல் உலகப் போருக்கான நிகழ்வுகள் ஏற்படலாயின. காரணம் இன்னும் பல கூறலாம். ஐரோப்பிய அரசுகள் ஏற்கனவே போருக்கு தயாராகிவிட்டனர்.